செய்திகள் :

ஹிந்தி சர்ச்சை: பவன் கல்யாண் பிறப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமல்! -திமுக எதிர்வினை

post image

பவன் கல்யாண் பிறப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமலில் இருப்பதாக திமுக தரப்பில் எதிர்வினையாற்றப்பட்டுள்ளது.

வணிக ரீதியாக பலனடைய வேண்டி தமிழ் திரைப்படங்களை ஹிந்தியில் மொழி பெயர்ப்பு செய்யும்போது, ஹிந்தியை எதிர்ப்பது ஏன்? என்று ஆந்திர துணை முதல்வரும் தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

மேலும், அவர் பேசியிருப்பதாவது, “இதுபோன்ற செயல்கள் மூலம் உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், பிகார் உள்ளிட்ட ஹிந்தி பேசும் மாநிலங்களிலிருந்து நீங்கள் வருவாய் பெற முயற்சிக்கிறீர்கள். பல்வேறு வேலைகளிலும் பிகார் மாநில தொழிலாளர்களைச் சார்ந்திருக்கிறீர்கள். எனினும், ஹிந்தியை வெறுத்து ஒதுக்குகிறீர்கள். இது நியாயமா?

ஒவ்வொரு தரப்பும் கோபம் உண்டாகும்போது பிரித்தெடுத்துக்கொள்ள இந்தியா கேக் துண்டா என்ன?”

சென்னையில் தங்கியிருந்து தனது இளமைப் பருவத்தில் கல்வி பயிலும் போது, தன் மீது பாகுபாடு காட்டப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்த நிலையில், ஆந்திர துணை முதல்வர் பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ள திமுக தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், “1938-இலிருந்தே ஹிந்தி எதிர்ப்பை நாங்கள் கையிலெடுத்து வருகிறோம். தமிழ்நாட்டில் கல்வியாளர்கள் பலரிடம் கருத்து கேட்டு அதன்பின், அவர்கள் அளித்த கருத்துகளின் அடிப்படையில் இருமொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில், நடிகர்களிடம் கருத்துகளைக் கேட்டு அமல்படுத்தவில்லை.1968-இல் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பவன் கல்யாண் பிறந்திருக்கக்கூட மாட்டார். அவருக்கு தமிழ்நாட்டு அரசியல் தெரியாது. ஹிந்தியை நாங்கள் எதிர்ப்பது இது முதல்முறையல்ல. தாய்மொழியில் படிப்பதுதான் மக்களுக்கு கல்வியறிவு புகட்ட சிறந்த வழியாகும்” என்றார்.

பேரவைத் தலைவரை ஏன் சந்தித்தேன்? செங்கோட்டையன் விளக்கம்

பேரவைத் தலைவரை சந்தித்தது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்களித்துள்ளார்.அதில், பேரவைத் தலைவரை சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பது வழக்கமானது. இன்றுகூட 6, 7 அதிமுக உறுப்பினர்கள் பேரவ... மேலும் பார்க்க

ஐபிஎல்: சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ்!

மார்ச் 23இல் சென்னை மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிற... மேலும் பார்க்க

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி!

திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிகாக கூடுதல் வாகனம் நிறுத்துமிடம் வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்திசெய்ய... மேலும் பார்க்க

முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

பல்வேறு முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழல்: எந்த நடவடிக்கையும் அமலாக்கத்துறை எடுக்காதது ஏன்? சீமான் கேள்வி

டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் அமலாக்கத்துறை எடுக்காதது ஏன்? என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு ... மேலும் பார்க்க

வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை: வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த அண்ணாமலை

வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை என்று வேளாண் பட்ஜெட்டை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்ட... மேலும் பார்க்க