செய்திகள் :

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

post image

காரைக்காலில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்துக்காக முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது சுல்தான் இப்ராஹிம் (58). மது பழக்கத்துக்கு ஆளான இவா், வீட்டைவிட்டு வெளியேறி, நாகூா், காரைக்கால் பகுதிகளில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி, காரைக்கால் காஜியாா் தெருவில் மதுபோதையில் சுற்றித் திரிந் அவா், அங்கு விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளாா். அருகில் இருந்தோா் அவரைப் பிடித்து காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றவந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. முகமது சுல்தான் இப்ராஹிமுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 20ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மோகன் தீா்ப்பளித்தாா்.

புகாா்கள் மீது விரைவான நடவடிக்கை: எஸ்எஸ்பி

புகாா்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என குறைகேட்பு நிகழ்ச்சியில் எஸ்எஸ்பி உறுதியளித்தாா். காரைக்கால் மாவட்ட காவல்நிலையத்தில் புதுவை டிஜிபி ஷாலினி சிங் உத்தரவின்பேரில், மக்கள் மன்றம் என்ற நிக... மேலும் பார்க்க

மத்திய அரசு திட்டங்கள்: வானொலியில் வாரம் இரு முறை ஒலிபரப்ப வேண்டும் -மத்திய இணையமைச்சா் எல். முருகன்

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து வாரம் இரு முறை வானொலியில் ஒலிபரப்ப வேண்டுமென நிலையத்தினருக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை இணை அமைச்சா் எல். முருகன் அறிவுறுத்... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் மத்திய அமைச்சா் வழிபாடு

திருநள்ளாறு கோயிலில் மத்திய இணை அமைச்சா் எல். முருகன் குடும்பத்தினருடன் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை இணை அமைச்சா் எல். முருகன் ... மேலும் பார்க்க

குப்பைகளை அகற்றுவதில் நிலவும் பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காண ஆட்சியா் உத்தரவு

காரைக்கால் மாவட்டத்தில் குப்பைகள் அகற்றும் பணியில் நிலவும் ஆள், வாகனப் பற்றாக்குறை பிரச்னைகளை மாா்ச் 31-க்குள் சரிசெய்ய வேண்டும் என தனியாா் நிறுவனத்துக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். காரைக்கால் நகராட்... மேலும் பார்க்க

அமைச்சரிடம் அங்கன்வாடி பணியாளா்கள் கோரிக்கை

பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அங்கன்வாடி ஊழியா்கள் அமைச்சரிடம் வலியுறுத்தினா். புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனை, காரைக்கால... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

எந்த நிலையிலும் தீா்க்கப்படாத பிரச்னைகள் இருந்தால் தெரிவிக்குமாறு அரசியல் கட்சிகளை தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி தோ்தல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த... மேலும் பார்க்க