செய்திகள் :

Axar Patel: `கிரிக்கெட் வீரராகவும் மனிதனாகவும் இங்குதான்.!’ - DC அணியின் புதிய கேப்டன் அக்சர் படேல்

post image

இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் அக்சர் படேலை, வரும் ஐபில் தொடருக்கு தங்கள் அணியின்  கேப்டனாக  நியமித்துள்ளது டெல்லி கேபிட்டல்ஸ். 

அதிக எதிர்பார்ப்புகள் நிலவும் இந்த  சீசனில்  புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளது டெல்லி கேபிடல்ஸ். 

சமீபத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்திய அணி. இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார் அக்சர் படேல். இதுவே டெல்லி நிர்வாகம் அக்சர் படேலைத் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

முந்தை சீசனில் ரிஷப் பண்ட் தலைமையிலான அணி, சரியாகச் செயல்படாததும் அணி நிர்வாகம் இந்த முடிவெடுத்ததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. மேலும் பண்ட் இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் விளையாடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

31 வயதான அக்சர் படேல் 6 சீசன்கள் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடியுள்ளார். 82 போட்டிகளில் 967 ரன்கள் மற்றும் 7.09 எகானமியில் 62 விக்கெட் எடுத்துள்ளார். 

Axar Patel என்ன சொல்கிறார்?

கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து அக்சர் படேல், "டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வழிநடத்துவது எனக்கு முழுமையான கௌரவம். இதில் என் மீது நம்பிக்கை வைத்த உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நான் நன்றி கடன்பட்டுள்ளேன்." எனக் கூறியுள்ளார். 

மேலும், "நான் ஒரு கிரிக்கெட் வீரராகவும் மனிதனாகவும் டெல்லி கேபிட்டல்ஸில்தான் வளர்ந்தேன். இப்போது அணியை வழிநடத்தத் தயாராகவும் உறுதியாகவும் இருக்கிறேன். 

எங்கள் பயிற்சியாளர்களும் உறுப்பினர்களும் மெகா ஏலத்தில் மிகச்சிறந்த பணியைச் செய்துள்ளனர், அபாரமான ஆற்றல் கொண்ட ஒரு சமநிலையான மற்றும் வலுவான அணியை உருவாக்கியிருக்கின்றனர்.

எங்கள் அணியில் தலைமை தாங்கியவர்கள் பலர் உள்ளனர், அது எனக்கு உதவியாக இருக்கும். ரசிகர்களின் மகத்தான அன்புடனும் ஆதரவுடனும் அணியில் இணைய ஆவலாக இருக்கிறேன்" என்றும் பேசியுள்ளார். 

இந்த ஆண்டு ஐபிஎல்லில் பங்குபெறும் 10 அணிகளில் 5 அணிகள் புதிய கேப்டன்களை அறிவித்துள்ளன. டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி அணியாக கேப்டனை அறிவிக்கிறது. 

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``ICC என்றால் இந்திய கிரிக்கெட் கவுன்சிலா?'' - ICC முடிவுகளை கண்டித்த ஜாம்பவான்கள்!

வெஸ்ட்இண்டிஸ்அணியின் முன்னால்லெஜண்டரிவேகப்பந்து வீச்சாளர் ஆண்டிராபர்ட்ஸ், இந்தியாவுக்கு சாதகமாகசாம்பியன்ஸ்டிராபிதொடரில் அனைத்து போட்டிகளையும் இந்திய வீரர்கள் ஒரே மைதானத்தில் விளையாடியதைக்கண்டித்துள்ளா... மேலும் பார்க்க

Dhoni: "எப்போதும் தோனியுடன் இருக்க விரும்புகிறேன்..." - நெகிழும் சஞ்சு சாம்சன்

ஐ.பி.எல் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், தனது அணியிலிருக்... மேலும் பார்க்க

KL Rahul: விராட் கோலியின் 9 வருட சாதனை முறியடிப்பு... முதலிடத்துக்கு முன்னேறிய கே.எல்.ராகுல்!

இந்திய அணி 2025-ஐ பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தோல்வியுடன் தொடங்கினாலும், உடனடியாக அதிலிருந்து மீண்டெழுந்து தற்போது ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி கைப்பற்றி அசத்தியிருக்கிறது. அதுவும் ஒரு சில வீரரின் செய... மேலும் பார்க்க

Rahul Dravid: ஊன்றுகோலுடன் களத்துக்கு வந்த டிராவிட்... இணையத்தில் வைரலாகும் வீடியோ - நடந்தது என்ன?

ஐபிஎல் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி கொல்கத்தா vs பெங்களூரு ஆட்டத்துடன் கோலாகலமாக தொடங்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு அனைத்து ஐ.பி.எல் அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சாம்பியன்ஸ் ட்ராபி... மேலும் பார்க்க

'இன்னொரு முறை இது நடந்தால் பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும்' - ஷேன் பாண்ட் சொல்வதென்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி போட்டியின் போது பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் சி... மேலும் பார்க்க

Pakistan: ``தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐ.சி.யு-வில் இருக்கிறது" - விமர்சிக்கும் அப்ரிடி

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் லீக் சுற்றுலியே வெளியேறியது அந்நாட்டு முன்னாள் வீரர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இப்போது, அடுத்ததாக நியூசிலாந்துக்கெதிரான தொடருக்கு ப... மேலும் பார்க்க