நியூசி.க்கு எதிரான தொடரில் சிறந்த முடிவுகளை பெறுவோம்: பாக். கேப்டன்
``நாடு திரும்பக் கூடாதுனு சொன்னாங்க, கொலை மிரட்டல் எல்லாம் வந்திருக்கு..'' - வருண் சக்ரவர்த்தி டாக்
2021 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி ஆடியிருந்தார். ஆனால், சிறப்பாக ஆடாததால் அணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இப்போது அதே துபாயில் நடைபெற்ற சாம்பியன் டிராபியில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றி இருக்கிறார். தற்போது இந்திய அணியில் மிக முக்கியமானச் சுழற்பந்து வீச்சாளர் என்ற இடத்தைப் பிடித்திருக்கும் வருண் சக்ரவர்த்தியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வருண் சக்ரவர்த்திக்கு கொலை மிரட்டல் வந்தது குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.

இது தொடர்பாகப் பேசியிருக்கும் அவர், "தற்போது எனக்கு நடக்கும் நல்ல விஷயங்களை எல்லாம் நம்பவே முடியவில்லை. 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் நான் சரியாக விளையாடவில்லை என்று பல விமர்சனங்களை எதிர்கொண்டேன். அந்த சமயத்தில் எனக்கு நிறையக் கொலை மிரட்டல்களும் வந்தது. இந்தியாவிற்கு திரும்பக்கூடாது என்று மிரட்டினார்கள். என்னுடைய வீட்டிற்கு வந்து என்னைத் தேடுவார்கள். சில சமயம் நான் என்னுடைய வீட்டில் மறைந்து கொள்வேன். நான் விமான நிலையத்திலிருந்து வீடு திரும்பியபோது பைக்கில் சிலர் என்னை பின் தொடர்ந்து வந்தார்கள். இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது. இதனால் நான் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தேன். ரசிகர்கள் மிகவும் எமோஷனலானவர்கள் என்று புரிந்துக்கொள்ள முடிகிறது.
டி20 உலக கோப்பை தொடரில் நான் சிறப்பாக செயல்படுவேன் என்றுதான் என்னை எடுத்தார்கள். ஆனால் நான் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அதன் பிறகு மூன்று ஆண்டுகளாக நான் இந்திய அணிக்கு தேர்வாகவில்லை. நான் இந்திய அணிக்கு அறிமுகமாவதற்கு கூட இவ்வளவு கஷ்டப்பட்டது கிடையாது. ஆனால் மீண்டும் கம்பேக் கொடுக்க கடுமையாக போராடி இருக்கிறேன். 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு என்னுடைய கிரிக்கெட்டில் நான் பல மாற்றங்களை செய்தேன். பயிற்சி செய்யும் முறையை மாற்றினேன். முன்பெல்லாம் நான் ஒவ்வொரு பயிற்சி முகாமிலும் 50 பந்துகளை வீசுவேன்.

ஆனால் தற்போது 100 பந்துகளை வீசி வருகின்றேன். தேர்வு குழுவினர் என்னை சேர்ப்பார்களா இல்லையா என்பதெல்லாம் தெரியாது. ஒரு கட்டத்தில் எல்லாம் இனி முடிந்துவிட்டது என்று நினைத்தபோதுதான், ஐபிஎல் கோப்பையை வென்றோம். அதன்பிறகு மீண்டும் எனக்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கிறது. இது எனக்கு மகிழ்ச்சிதான். இந்த சாம்பியன் டிராபி கோப்பைத்தான் எனக்கு மிகச்சிறந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது" என்று வருண் சக்கரவர்த்தி தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs