உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்: முதல்வர் மீண்டும் கோரிக்கை
நியூசி.க்கு எதிரான தொடரில் சிறந்த முடிவுகளை பெறுவோம்: பாக். கேப்டன்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறந்த முடிவுகளை பெற முயற்சி செய்வோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அகா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நாளை (மார்ச் 16) தொடங்குகிறது.
இதையும் படிக்க: காயம் குணமாகியது: சன்ரைசர்ஸ் அணியில் இணையும் நிதீஷ் ரெட்டி!
பாகிஸ்தான் கேப்டன் சொல்வதென்ன?
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறந்த முடிவுகளை பெற முயற்சி செய்வோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அகா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இளம் வீரர்கள் அவர்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி அவர்களது திறமையைக் காட்டுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்கள் பலரும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு நல்ல முடிவுகளைப் பெற முயற்சிப்போம் என்றார்.
இதையும் படிக்க: முதல்முறையாக இந்திய சினிமாவில் அறிமுகமான டேவிட் வார்னர்..!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.