செய்திகள் :

இருளில் மூழ்கிய கியூபா! என்ன நடந்தது?

post image

கியூபாவில் நேற்று (மார்ச். 14) திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான மின்வெட்டு காரணமாக அந்நாட்டின் பல மாகாணங்கள் இருளில் மூழ்கின.

கியூபா தலைநகரான ஹவானா அருகிலுள்ள தீஸ்மெரோ துணை மின் நிலையத்தில் நேற்று இரவு மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக தெற்கு கியூபா உள்பட நாட்டின் பல மாகாணங்களில் லட்சக்கணக்கான மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.

’இது தேசிய மின்சாரத் துறையின் தோல்வி. இதனை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என கியூபா எரிசக்தி மற்றும் சுரங்கத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மின் தடையைத் தொடர்ந்து ஹவானா உள்பட பல மாகாணங்களில் ஜெனரேட்டர்கள் உள்ள இடங்கள் அன்றி மற்ற இடங்கள் இருளாக உள்ளன. இணைய சேவையும் நாடு முழுக்க பாதிப்படைந்துள்ளது.

இதையும் படிக்க | அமெரிக்காவில் ஹமாஸ் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற இந்திய மாணவியின் விசா ரத்து!

அதிக தேவை ஏற்படும் (பீக் ஹவர்) நேரங்களில் பொதுவாக 3,250 மெகாவாட் மின் தேவை இருக்கும். ஆனால், தற்போது மின் தடையால் 1,380 மெகா வாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் மொத்த மின் தேவையில் 42% பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. சமீபமாக ஏற்பட்ட மின் தடை சம்பவங்களில் இது பெரியது இல்லை என்று கூறப்படுகிறது.

கியூபா கடந்தாண்டு இறுதியில் மட்டும் 3 பெரிய மின்சார செயலிழப்புகளைக் கண்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்த இந்நாடு, முழுவதுமாக இருளில் மூழ்கியது.

இங்குள்ள மின்சாரக் கட்டுமானங்கள் அடிக்கடி செயலிழக்கின்றன. முக்கிய வேலை நேரங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்குகின்றன. எரிபொருள் பற்றாக்குறை, உழமையான உள்கட்டமைப்பு காரணமாக இவை நிகழ்வதாகக் கூறப்படுகிறது.

பெரும்பாலான இடங்களில் சமைப்பதற்கும், நீர் எடுப்பதற்கும் மின்சாரத் தேவை உள்ளது.

இதையும் படிக்க | கிளா்ச்சிப் படை முன்னேற்றம் காங்கோவிலிருந்து வெளியேறும் தென் ஆப்பிரிக்க ராணுவம்

இதனைத் தொடர்ந்து, நாடு முழுக்க 12-க்கும் மேற்பட்ட சூரிய மின் உற்பத்தி பூங்காக்களை நிறுவ அரசு முடிவெடுத்த நிலையில், இந்தாண்டு அவை செயல்பாட்டுக்கு வரவுள்ளன. இதனால், மின் தடை பிரச்னைகள் குறையுமென்று கூறப்படுகிறது.

மின் தடை பிரச்னைகள் காரணமாக கடந்த 2021, 2022, 2024 ஆகிய ஆண்டுகளில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார்?

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார். சுனிதாவையும் அவருடன் சென்றுள்ள மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோரையும் அழ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உள்பட 41 நாடுகளின் குடிமக்களுக்கு பயணத் தடையா? டிரம்ப் சொல்வது என்ன?!

பல நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்கா செல்வதற்கான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீ... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: 6 பேர் பலி!

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள டிரோன் தாக்குதலில் 6 பேர் பலியாகினர்.காஸாவின் வடக்கு பகுதியிலுள்ள பீய்ட் லஹியாவில் பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான் வழ... மேலும் பார்க்க

கிளா்ச்சிப் படை முன்னேற்றம் காங்கோவிலிருந்து வெளியேறும் தென் ஆப்பிரிக்க ராணுவம்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் புதிய பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறிய சூழலில், அந்த நாட்டின் அரசுப் படையினருக்கு ஆதரவாகப் போரிட்டுவந்த தென் ஆப்... மேலும் பார்க்க

உக்ரைன் போருக்குத் தீா்வு காண ‘உன்னதப் பணி’ - மோடி, டிரம்ப்புக்கு புதின் நன்றி

உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவர ‘உன்னதப் பணியை’ மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமா் மோடி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளா... மேலும் பார்க்க

கனடா பிரதமராக மாா்க் காா்னி பதவியேற்பு: அரசியல் அனுபவமே இல்லாதவா்

கனடாவின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணரும், அரசியல் அனுபவமே இல்லாதவருமான மாா்க் காா்னி (59) வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். கனடா மத்திய வங்கி, பிரிட்டன் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த காா்னி, நேரடியாக க... மேலும் பார்க்க