செய்திகள் :

அமெரிக்காவில் ஹமாஸ் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற இந்திய மாணவியின் விசா ரத்து!

post image

அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற இந்தியரான கொலம்பிய பல்கலைக்கழக மாணவியின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ரஞ்சனி ஸ்ரீனிவாசன் இளநிலை படிப்பை அகமதாபாத் சிஇபிடி பல்கலையிலும், முதுநிலை படிப்பை ஹார்வார்ட் பல்கலையிலும் படித்து முடித்தார். இவர், ‘காலநிலை மாற்றத்தால் விளிம்புநிலை மக்கள் சந்திக்கும் பிரச்னைகள்’ என்ற தலைப்பில் மாசசூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தற்போது முனைவர் பட்டம் பெற படித்து வந்தார். இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ரஞ்சனி ஸ்ரீனிவாசனின் கல்வி விசா அமெரிக்க அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | உக்ரைன் போருக்குத் தீா்வு காண ‘உன்னதப் பணி’ - மோடி, டிரம்ப்புக்கு புதின் நன்றி

இதனை, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. பயங்கரவாத அமைப்பாகக் கருதப்படும் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ரஞ்சனி ஸ்ரீனிவாசனின் விசா மார்ச். 5, 2025 முதல் ரத்து செய்யப்படுகிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர் மார்ச் 11 அன்று அமெரிக்காவை விட்டு வெளியேறினார்.

விசா ரத்து செய்யப்பட்டப் பிறகு நாட்டை விட்டு தாமாக வெளியேற சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுமதி உள்ளது. அதேபோல, அவர்களாக வெளியேறாவிட்டால் வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்படுவார்கள். கடந்த மாதம், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை இந்த முறையில் அமெரிக்கா நாடு கடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | கிளா்ச்சிப் படை முன்னேற்றம் காங்கோவிலிருந்து வெளியேறும் தென் ஆப்பிரிக்க ராணுவம்

விமான நிலையத்தில் ரஞ்சனி ஸ்ரீனிவாசன் இருக்கும் காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த உள்நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளர் கிறிஸ்டி நோயம், “அமெரிக்காவில் தங்கி படிப்பதற்கு விசா கிடைப்பது தனிச்சலுகையாகக் கருதப்படுகிறது. நீங்கள் வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றிற்கு ஆதரவு தெரிவிக்கையில் அந்த சலுகை ரத்து செய்யப்படும். பின்னர், இந்த நாட்டில் நீங்கள் இருக்கமுடியாது.

கொலம்பியா பல்கலையில் படித்த பயங்கரவாத ஆதரவாளர் ஒருவர் எல்லைப் பாதுகாப்புச் செயலியைப் பயன்படுத்தி தாமாக நாட்டை விட்டு வெளியேறியது மகிழ்ச்சியளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல்- ஹமால் இடையிலான போரைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தை ஆதரித்துப் போராடும் மாணவர்களுக்கு கொலம்பியா பல்கலை மையப் புள்ளியாக மாறியுள்ளது.

பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த கொலம்பிய பல்கலையின் முன்னாள் மாணவரான மஹ்மூத் கலீல் என்பவர் கடந்தாண்டு பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தை முன்நின்று நடத்தியதால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவரது க்ரீன் கார்ட் ரத்து செய்யப்பட்டு, நாடு கடத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, கொலம்பிய பல்கலையின் லேகா கோர்டியா என்ற மாணவரும் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

தலைகீழாக நெருப்பில் தொங்கவிட்டு சடங்கு: 6 மாதக் குழந்தை பார்வை இழந்த பரிதாபம்!

மத்திய பிரதேசத்தில் 6 மாதக் குழந்தையை தலைகீழாக நெருப்பில் தொங்கவிட்டு சடங்கு செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 13ல் கோலாரஸ் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியில் இந்த அதிர... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களின் மையமாகும் ஹம்பி! வெளிநாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

பெங்களூரு : கர்நாடகத்தில் வெளிநாட்டுப் பெண்மணி ஒருவர் மீண்டும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹம்பியில் கடந்த வாரம் நடைபெற்ற ‘ஹம்பி திருவிழாவைக்’... மேலும் பார்க்க

சரியாகப் படிக்கவில்லை.. மகன்களைக் கொன்று தந்தை தற்கொலை!

ஆந்திர மாநிலத்தில் சரியாகக் கல்வி கற்காத இரு மகன்களைக் கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திப் பிரதேசம் காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வி. சந்திர கிஷோர் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை பயணம்!

பிரதமர் மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இலங்கை அமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் ஒதுக்கீடு குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும்போது வெளியுறவு அமைச்சர் விஜிதா... மேலும் பார்க்க

பாப்கார்னை தொடர்ந்து அதிக வரி விதிப்பில் டோனட்கள்: காங்கிரஸ்

பாப்கார்னுக்கு அடுத்தப்படியாக டோனட்கள் அதிக வரி விதிப்புக்குள்ளாகியிருப்பதாக காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது.இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ராமேஷ் எக்ஸ் தளத்தில்..சிங்கப்பூரைத் தளமாகக... மேலும் பார்க்க

என்ன, ஏடிஎம் கார்டு இருந்தாலே.. காப்பீடாக ரூ.2 லட்சம் கிடைக்குமா?

ஒருவர் வைத்திருக்கும் வங்கிக் கணக்குக்கான ஏடிஎம் கார்டுக்கே ரூ.2 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்பது சிலருக்குத் தெரிந்த, பலருக்கும் தெரியாத தகவலாக இருக்கிறது.தனது பெயரில் உள்ள வங்கிக் கணக்... மேலும் பார்க்க