செய்திகள் :

பாப்கார்னை தொடர்ந்து அதிக வரி விதிப்பில் டோனட்கள்: காங்கிரஸ்

post image

பாப்கார்னுக்கு அடுத்தப்படியாக டோனட்கள் அதிக வரி விதிப்புக்குள்ளாகியிருப்பதாக காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ராமேஷ் எக்ஸ் தளத்தில்..

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட சங்கிலி மேட் ஓவர் டோனட்ஸ், பேக்கரி பொருள்களுக்கு 18 சதவீத வரி செலுத்துவதற்குப் பதிலாக, தனது வணிகத்தைத் தவறாக வகைப்படுத்தி 5 சதவீத ஜிஎஸ்டி செலுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு ரூ.100 கோடி அபராதத்தை எதிர்கொண்டுள்ளது.

பாப்கார்னுக்கு அடுத்தபடியாக தற்போது டோனட்கள் அதிக ஜிஎஸ்டியால் பாதிக்கப்படுகிறது. இந்த விவகாரம் மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதைக் குறிப்பிட்டு, வணிகம் செய்வதை எளிதாக்குதல் அவசியம் என்றும் அவர் கூறினார்.

கடந்தாண்டு டிசம்பரில் ஜிஎஸ்டியின் கீழ் பாப்கார்னுக்கு மூன்று வெவ்வேறு விதமான வரிகள் விதிக்கப்பட்டது, ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்த சிக்கல்களை வெளிப்படுத்தியிருக்கிறது என்று குற்றம்சாட்டியிருக்கும் காங்கிரஸ், மேலும் ஜிஎஸ்டி 2.0-ஐ மறுசீரமைத்து, முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த மோடி அரசு முன்வருமா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்த ஜி.எஸ்.டி 2.0 சிக்கல்கள் பற்றி காங்கிரஸ் 2024-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது வெளியிட்ட நியாய பத்திரம் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததாகவும் அதில் எளிய வரி விதிப்பு குறித்துத் தெரிவித்து, அதனை கொண்டு வருவதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

சம்பல் மசூதியில் வெள்ளையடிக்கும் பணி தொடக்கம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சம்பல் மசூதியில் வெள்ளையடிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மார்ச் 12 ஆம் தேதி, அலகாபாத் உயர் நீதிமன்றம், மசூதியின் வெள்ளையடிக்கும் பணியை ஒரு வாரத்திற்குள் முடித்து முடி... மேலும் பார்க்க

இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கவராதி ஃபைசல் நதீம் என்கிற அபு கத்தால் மிகவும் தேடப... மேலும் பார்க்க

குவாலியரில் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

குவாலியரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத... மேலும் பார்க்க

இந்தியா-சீனா இடையே சராசரியைவிட கூடுதல் வா்த்தக விரிவாக்கம்!

வளரும் நாடுகளில் குறிப்பாக இந்தியா - சீனா இடையே கடந்த 2024-ஆம் ஆண்டின் 4-ஆம் காலாண்டில் சராசரியைவிட சிறந்த வா்த்தக விரிவாக்கம் பதிவாகியுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், வரும்... மேலும் பார்க்க

சிஏஜி தோ்வு நடைமுறைக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) தோ்வுக்கான தற்போதைய நடைமுறையை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 17) விசாரணைக்கு... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் ஆயுதங்களைக் கைவிட்ட 10,000 இளைஞா்கள்: அமித் ஷா பெருமிதம்

அஸ்ஸாமில் கடந்த 10 ஆண்டுகளில் 10,000-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, சமூக அமைப்பு முறையில் இணைந்துள்ளனா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தாா். ‘அஸ்ஸாமில் ... மேலும் பார்க்க