செய்திகள் :

சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்த டிராகன் விண்கலம்!

post image

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர அனுப்பப்பட்டுள்ள டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்துள்ளது. இந்த விண்கலம் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 16) காலை 10 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்ததாக நாசா தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆன் மெக்ளெய்ன் மற்றும் நிகோல் ஏயெர்ஸ், ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸாவை சேர்ந்த விஞ்ஞானி டகூயா அனிஷி, ரஷிய நிறுவனமான ரோஸ்கோமோஸை சேர்ந்த விஞ்ஞானி கிரில் பெஸ்கோவ் ஆகிய நால்வரும் டிராகன் விண்கலத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் இறங்கினர்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற அவர்களை, அங்கு கடந்த 9 மாதங்களாக தங்கியிருந்து ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வரும் சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோருடன் சேர்ந்து பிற விஞ்ஞானிகளும் கைதட்டி வரவேற்றனர். இந்த படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து, சுனிதா வில்லியம்ஸும் பட்ச் வில்மோரும் டிராகன் விண்கலத்தில் அமெரிக்க மற்றும் ரஷிய வின்வெளி வீரர்கள் இருவருடன் சேர்ந்து மார்ச் 19-ஆம் தேதி பூமிக்கு திரும்புவர் என்று நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த திட்டத்தில் தொழில்நுட்பக் கோளாறுகளாலோ அல்லது பிற காரணங்களாலோ கால தாமதம் ஏற்படவும் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ராணுவ வாகனங்கள் மீது தற்கொலைப்படைத் தாக்குதல்! -90 வீரர்கள் பலி?

இஸ்லாமாபாத் : தென்மேற்கு பாகிஸ்தானில் க்வெட்டாவிலிருந்து ஈரானிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள டாஃப்டான் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த ராணுவ பாதுகாப்புப் படை வாகனங்களை குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை(மார்ச்... மேலும் பார்க்க

வடக்கு மாசிடோனியாவில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: 50 பேர் பலி!

ஐரோப்பிய தேசமான வடக்கு மாசிடோனியாவில் செயல்பட்டு வந்த இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 50 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 16) அதிக... மேலும் பார்க்க

காஸாவில் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னும் இஸ்ரேல் தாக்குதல்: 150 பேர் உயிரிழப்பு!

காஸாவில் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின் இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள தாக்குதல்களில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த இரு வாரங்களில் மட்டும் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று காஸா ஊடக ... மேலும் பார்க்க

கனடா: புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்களுக்கு பதவி!

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அமைச்சரவையில் இந்திய வம்சாவளிப் பெண்கள் இருவருக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ மீது பொதுமக்களுக்கும், ஆளும் லிபரல் கட்ச... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா வான் வழி தாக்குதல்: 24 பேர் பலி!

யேமன் நாட்டில் அமெரிக்க படைகள் வான் வழி தாக்குதலை நிகழ்த்தியுள்ளன. இந்த தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.யேமன் தலைநகர் சனாவில் சனிக்கிழமை(மார்ச் 15) நடத்தப்பட்டுள்ள தாக்குதலில்... மேலும் பார்க்க

இராக்கில் ஐ.எஸ். முக்கிய தலைவா் படுகொலை: அமெரிக்கா

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் இரண்டாம் நிலை தலைவா் அபு காதிஜா, இராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டது தற்போது உறுதியாகியுள்ளது.இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் இராக் பிர... மேலும் பார்க்க