செய்திகள் :

இந்தியா - சீனா போட்டி, மோதலாக மாறக் கூடாது: பிரதமர் மோடி

post image

இந்தியா - சீனா இடையிலான போட்டி மோதலாக மாறக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் இயற்கையானவை என்றும், ஆனால், உலகின் நிலைத்தன்மைக்காக வலுவான கூட்டு ஒத்துழைப்பில் இரு நாடுகளும் ஆர்வமுடன் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

செய்யறிவு தொழில்நுட்ப ஆய்வாளர் லெக்ஸ் ஃபிரிட்மேன் உடனான நேர்காணலின்போது இந்தியா - சீனா உறவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,

''சமீபத்தில் (கடந்த ஆண்டு அக்டோபர்) சீன அதிபர் ஸி ஜின்பிங் உடனான சந்திப்பின்போது, எல்லைப் பகுதிகளில் இயல்பு நிலையை நீட்டிக்கச் செய்வதற்கான பார்வைகளை இருவரும்ப கிர்ந்துகொண்டோம். 2020-க்கு முன்பு எல்லைப் பகுதிகளில் நிலைத்திருந்த அமைதியை மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இருதரப்பிலும் ஈடுபட்டுள்ளோம்.

மெதுவாக, அதே நேரத்தில் நிச்சயமாக எல்லைகளில் இயல்பு நிலை திரும்பும். எல்லைகளில் முன்பு இருந்த அதே உற்சாகம், ஆற்றல் மீண்டும் திரும்பும். ஆனால், இதற்கு நேரம் எடுக்கும் என்பது மறுப்பதற்கில்லை.

இந்த நவீன உலகில் சீனாவின் பங்கு முக்கியமானது. வரலாற்றுப் பதிவுகளை எடுத்துப் பார்த்தால் சீனாவும் இந்தியாவும் ஒருவரிடமிருந்து மற்றொருவர் பாடங்களைக் கற்றுள்ளனர்.

இருதரப்பும் உலக மேம்பாட்டிற்காக அளப்பறிய பங்காற்றியுள்ளன. பொருளாதார வரலாற்றை திரும்பிப் பார்த்தால், இந்தியாவும் சீனாவும் மட்டுமே உலகின் மொத்த ஜிடிபியில் 50% பங்காற்றியுள்ள பதிவுகளைக் காணலாம்.

இந்தியாவின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு எத்தகையது என்பதை இதிலிருந்து அறியலாம். சீனா உடனான கூட்டு ஒத்துழைப்பு கலாசார ரீதியிலும் வலுவாக உள்ளதாக நான் நம்புகிறேன்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | வாழ்க்கையின் நோக்கத்தை அறிய உதவியது ஆர்.எஸ்.எஸ்: மோடி

இதையும் படிக்க | சொல்லப் போனால்... மும்மொழியும் செம்மொழியும் வேண்டாத ஆணியும்!

தானாப்பூா் - பெங்களூரு ரயில் சேவை நீட்டிப்பு!

தானாப்பூா் - பெங்களூரு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் மேலும் இரு நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

அமெரிக்க உளவுத் துறை இயக்குநருடன் அஜீத் தோவல் சந்திப்பு!

அமெரிக்க தேசிய உளவுத் துறை இயக்குநா் துளசி கப்பாா்டை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா். அமெரிக்க தேசிய உளவுத் துறை இயக்குநா் துளசி கப்பாா்ட் இரண... மேலும் பார்க்க

இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வணிக ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே தடையற்ற வணிக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கும் நியூ... மேலும் பார்க்க

வளர்ச்சிப் பாதையில் வடகிழக்கு மாநிலங்கள்: அமித் ஷா

கிளர்ச்சி, வன்முறை போன்ற பிரச்னைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லப்பட்டுள்ளதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.அஸ்ஸாம் மாநிலத்தின் க... மேலும் பார்க்க

வாழ்க்கையின் நோக்கத்தை அறிய உதவியது ஆர்.எஸ்.எஸ்: மோடி

வாழ்க்கையின் நோக்கத்தை அறிய ஆர்.எஸ்.எஸ். தனக்கு உதவியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். செய்யறிவு தொழில்நுட்ப ஆய்வாளர் லெக்ஸ் ஃபிரிட்மேன் உடனான நேர்காணலின்போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏஐ குறித்த... மேலும் பார்க்க

கேதர்நாத் யாத்திரை: ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்குத் தடை விதிக்க பாஜக கோரிக்கை!

கேதர்நாத் யாத்திரை செல்பவர்களில் ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு தடை விதிக்க பாஜக கோரிக்கை வைத்துள்ளது. கேதார்நாத் யாத்திரை தொடர்பான மேலாண்மை கூட்டம் இன்று நடைபெற்றது. கேதர்நாத் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக... மேலும் பார்க்க