செய்திகள் :

யேமனில் அமெரிக்கா வான் வழி தாக்குதல்: 24 பேர் பலி!

post image

யேமன் நாட்டில் அமெரிக்க படைகள் வான் வழி தாக்குதலை நிகழ்த்தியுள்ளன. இந்த தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

யேமன் தலைநகர் சனாவில் சனிக்கிழமை(மார்ச் 15) நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் 13 பேரும், ஹௌதி படையினர் அதிகளவில் வசித்து வரும் சாதா பகுதியில் 4 குழந்தைகள், ஒரு பெண்மணி உள்பட 11 பேரும் உயிரிழந்தனர்.

செங்கடலில் இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதலை தொடரப்போவதாக ஹௌதி படையினர் அச்சுறுத்தியுள்ள நிலையில், அதற்கு எதிர்வினையாக யேமன் நாட்டில் ஹௌதி படையினர் வசிக்கும் இடங்களைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. வானிலிருந்து குண்டு மழை பொழிந்த நிலையில், குண்டு விழுந்த இடங்களுக்கு அருகிலிருந்த பகுதிகளில் பயங்கர வெடிச்சத்தமும் அதிர்வும் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க ராணுவத்தின் இந்த தாக்குதலை போர்க்குற்றம் என்று கண்டனம் தெரிவித்துள்ளது ஹௌதி நிர்வாகக் குழு. அமெரிக்கவுக்கு பதிலடி தர தங்கள் படையினர் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றபின் ஹௌதி படையினர் மீது நடத்தப்படும் முதல் தாக்குதல் இதுவாகும். இந்த நிலையில், ஹௌதி படையினர் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க போர்க் கப்பல்கள் மற்றும் வணிக கப்பல்கள் மீது ஹௌதி படை 174 முறை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஹௌதி படையினரை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்று டிரம்ப் நிர்வாகம் வரையறுத்துள்ளது.

இந்த நிலையில், ஈரான் ஹௌதி படைக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக நிறுத்திக்கொள்ள டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், ஈரானின் வெளிநாட்டுக் கொள்கைகளில் தலையிட அமெரிக்காவுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று ஈரான் எதிர்வினையாற்றியுள்ளது.

வடக்கு மாசிடோனியாவில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: 50 பேர் பலி!

ஐரோப்பிய தேசமான வடக்கு மாசிடோனியாவில் செயல்பட்டு வந்த இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 50 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 16) அதிக... மேலும் பார்க்க

சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்த டிராகன் விண்கலம்!

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர அனுப்பப்பட்டுள்ள டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்துள்ளது. இந்த விண்கலம் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 16) காலை 10 மணியளவில் சர்வத... மேலும் பார்க்க

காஸாவில் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னும் இஸ்ரேல் தாக்குதல்: 150 பேர் உயிரிழப்பு!

காஸாவில் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின் இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள தாக்குதல்களில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த இரு வாரங்களில் மட்டும் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று காஸா ஊடக ... மேலும் பார்க்க

கனடா: புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்களுக்கு பதவி!

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அமைச்சரவையில் இந்திய வம்சாவளிப் பெண்கள் இருவருக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ மீது பொதுமக்களுக்கும், ஆளும் லிபரல் கட்ச... மேலும் பார்க்க

இராக்கில் ஐ.எஸ். முக்கிய தலைவா் படுகொலை: அமெரிக்கா

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் இரண்டாம் நிலை தலைவா் அபு காதிஜா, இராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டது தற்போது உறுதியாகியுள்ளது.இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் இராக் பிர... மேலும் பார்க்க

அமெரிக்காவில் இந்திய மாணவியின் விசா ரத்து: அரசிடம் விண்ணப்பித்து தாமாக நாடு திரும்பினாா்

பயங்கரவாதக் குழுவான ஹமாஸை ஆதரித்ததற்காக அமெரிக்காவில் நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்ட இந்திய மாணவி, அந்நாட்டு அரசு புதிதாக அறிமுகப்படுத்திய ‘சிபிபி ஹோம்’ செயலி மூலம் விண்ணப்பித்து தாமாக தாயகம் த... மேலும் பார்க்க