செய்திகள் :

Kerala: மருத்துவமனையிலிருந்த உடல் உறுப்பு சாம்பிள்கள் மாயம்; வட மாநில இளைஞர் கைது; என்ன நடந்தது?

post image

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று நோயாளிகளின் உடலில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் 17 உடல் பாகங்கள் அகற்றப்பட்டன. அந்த உடல் பாகங்களை ஆய்வுக்காக பத்தாலஜி டிப்பார்ட்மெண்டுக்கு அனுப்புவதற்காக பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் பாதுகாப்பாகச் சேகரிக்கப்பட்டன.

உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்ட கண்டெய்னர்களை எடுத்துச் சென்ற ஹவுஸ் கீப்பிங் ஊழியர் அஜய்குமார் அவற்றை பத்தாலஜி டிப்பார்ட்மெண்ட் அருகில் உள்ள மாடிப்படி கட்டில் வைத்துவிட்டு மற்றொரு டிப்பார்ட்மெண்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பிவந்து பார்த்த அந்த கண்டெய்னர்களை காணவில்லை. இதையடுத்து மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ்

இதையடுத்து அந்தப் பகுதியில் ஆக்கர் பொருட்கள் சேகரிக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் வந்து சென்றதாகவும், அவர்மீது சந்தேகம் உள்ளதாகவும் பத்தாலஜி டிப்பார்ட்மெண்டை சேர்ந்த ஊழியர் ஒருவர் கூறினார். திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் சி.சி.டி.வி காட்சிகளைச் சேகரித்து ஆய்வு செய்தனர்.

மெடிக்கல் காலேஜ் போலீஸார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆக்கர் தொழிலாளி இஸ்வர் சந்திரனைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், பிளாஸ்டிக் வேஸ்டுகள் என நினைத்து கண்டெய்னர்களை எடுத்துச் சென்றதாகவும், திறந்து பார்த்தபோது உடல் உறுப்புகள் இருந்ததைப் பார்த்துப் பயந்து மருத்துவமனை குப்பை மேட்டில் போட்டுச் சென்றதாகத் தெரிவித்தார். இதையடுத்து குப்பை மேட்டிலிருந்து உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. பார்மலின் திரவத்தில் பதப்படுத்தி வைத்ததால் உடற்பாகத்தின் சாம்பிள்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உடல்பாகங்களின் சாம்பிள்கள்

இந்த விவகாரத்தில் அலட்சியமாகப் பணி செய்ததாக ஹவுஸ் கீப்பிங் ஊழியரான அஜய்குமார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆக்கர் ஊழியர் ஈஸ்வர் சந்திரனை போலீஸார் இன்று கைது செய்தனர். அத்துமீறி நுழைதல் மற்றும் திருட்டு உள்ளிட்ட பிரிவுகளில் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி மருத்துவக் கல்லூரி இயக்குநருக்குச் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

கழிவுநீர் குழியில் விழுந்து குழந்தை பலி: "ஜல்லிக்கட்டுக்குக் காட்டும் ஆர்வத்தை.." -கொதிக்கும் மக்கள்

கழிவுநீர் குழியில் விழுந்து 4 வயது குழந்தை இறந்த சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இதற்குக் காரணமான அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ... மேலும் பார்க்க

கோவை: திருமணம் மீறிய உறவில் பிறந்த குழந்தை விற்பனை; 7 பேர் கைது; வெளியான அதிர்ச்சி பின்னணி

கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சேர்ந்தவர் சுனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்குத் திருமணமாகி ஏழு வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனியாக வாழ்... மேலும் பார்க்க

கோவை: லஞ்சப் பணத்துடன் குளத்தில் குதித்த VAO - சேஸ் செய்து பிடித்த போலீஸ்

கோவை மாவட்டம், ஆலாந்துறை அடுத்துள்ள தொம்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக கிருஷ்ணசாமி மத்வராயபுரம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்துக்குச் சென்... மேலும் பார்க்க

காதல் திருமணம்; தாலியை அறுத்தெறிந்த பெற்றோர்; உயிரிழந்த பெண் - காவல்துறை விசாரணை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் கணேசன். இவரின் மனைவி தமிழ்ப்பிரியா. இவர்களின் 21 வயது மகள் பூஜா. பள்ளிப்படிப்பை கும்மிடிப்பூண்டியில் முடித... மேலும் பார்க்க

சென்னை: `உனக்கு உன் மனைவி செய்வினை வைத்திருக்கிறாள்' - டெலிவரி ஊழியரை ஏமாற்றிய பெண்

சென்னை ஓட்டேரி, பாஷ்யம் 2-வது தெருவில் வசித்து வருபவர் அக்பர் (33). இவர் சிக்கன் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இந்தச் சூழலில் அக்பர் தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள ஆச... மேலும் பார்க்க

``பள்ளி ஆசிரியர்கள் கையில் சிறு கம்பு வைத்திருக்க வேண்டும்'' - கேரள ஐகோர்ட் கருத்து

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்ஞம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் ஒருவர் கம்பால் அடித்ததாக மாணவனின் பெற்றோர் அளித்த புகாரால், விழிஞ்ஞம் போலீஸார் வழக... மேலும் பார்க்க