சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 149 ரன்கள் இலக்கு!
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்துள்ளது.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி ராய்பூரில் இன்று (மார்ச் 16) நடைபெற்று வருகிறது. இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
இதையும் படிக்க: தில்லி கேபிடல்ஸின் கேப்டன் அக்ஷர் படேல் குறித்து மனம் திறந்த அபிஷேக் போரெல்!
இந்தியாவுக்கு 149 ரன்கள் இலக்கு
முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக லெண்டல் சிம்மன்ஸ் அதிகபட்சமாக 41 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டுவைன் ஸ்மித் 45 ரன்களும், தினேஷ் ராம்தின் 12 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.
இந்தியா தரப்பில் வினய் குமார் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நதீம் 2 விக்கெட்டுகளையும், நெகி மற்றும் பின்னி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க:ரஞ்சி கோப்பை அதிரடியை ஐபிஎல் தொடரிலும் தொடர காத்திருக்கும் கருண் நாயர்!
149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா மாஸ்டர்ஸ் அணி விளையாடி வருகிறது.