செய்திகள் :

இந்திய அணி வீரர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயணிப்பது சரியா? விராட் கோலி பதில்!

post image

இந்திய அணி வீரர்கள் கிரிக்கெட் தொடர்களுக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அவர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயணிப்பது குறித்து இந்திய அணியின் விராட் கோலி பேசியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இந்த தோல்வியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பினையும் இந்திய அணி இழந்தது.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்த பிறகு, இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ தரப்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. கிரிக்கெட் தொடருக்கான சுற்றுப்பயணங்களின்போது, அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் குறிப்பிட்ட நாள்கள் மட்டுமே வீரர்களுடன் தங்கியிருக்க முடியும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க: டபிள்யூபிஎல்: 3-ஆவது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற தில்லி..! பயிற்சியாளர் கூறியதென்ன?

45 நாள்களுக்கும் மேலாக நடைபெறும் தொடரில் குடும்ப உறுப்பினர்கள் 14 நாள்கள் வரை வீரர்களுடன் தங்கியிருக்கலாம். சிறிய தொடர்களுக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி வீரர்களுடன், அவரின் மனைவி அல்லது பெண் தோழிகள் ஒருவாரத்துக்கு தங்கியிருக்கலாம்.

விராட் கோலி கூறியதென்ன?

வீரர்களுடன் குடும்ப உறுப்பினர்கள் தங்கியிருக்க பிசிசிஐ வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் கிரிக்கெட் தொடர்களுக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அவர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தங்குவது குறித்து இந்திய அணியின் விராட் கோலி பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: குடும்பங்களின் பங்களிப்பை அனைவருக்கும் புரிய வைப்பது மிகவும் கடினம். வீரர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தங்கியிருப்பதன் மூலம் கிடைக்கும் மதிப்பினை பலரும் புரிந்துகொள்ள மாட்டார்கள். போட்டியில் சிறப்பாக செயல்படாத பட்சத்தில், என்னுடைய ஹோட்டல் அறைக்குச் சென்று தனியாக சோகமாக அமர்ந்திருப்பதை நான் விரும்பவில்லை. நான் இயல்பாக இருக்க வேண்டியிருக்கிறது.

இதையும் படிக்க: முதல் டி20: 10 ஓவர்களில் நியூசி. அபார வெற்றி!

குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்பதை மேலோட்டமாக நான் கூறவில்லை. உங்களது பொறுப்பினை சரியாக செய்து முடித்துவிட்டு, குடும்பத்துடன் இயல்பாக பேசி மகிழ்ந்தால் இயல்பு வாழ்க்கையும் பாதிக்காது. குடும்பத்துடன் நேரத்தினை செலவிடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியினை கொடுக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிட நான் தவறுவதில்லை என்றார்.

அண்மையில் துபையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின்போது, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் துபையில் தங்கியிருந்தார்கள். ஆனால், அவர்கள் வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டலில் தங்கவில்லை.

இதையும் படிக்க: இன்று ஐஎம்எல் கிரிக்கெட் லீக் இறுதி ஆட்டம்: இந்தியா-மே.இந்திய தீவுகள் மோதல்

கிரிக்கெட் தொடர்களின்போது, வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்குவதற்கான செலவினை சம்பந்தப்பட்ட வீரர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி பாகிஸ்தானை விட சிறந்த அணி: பிரதமர் மோடி

இந்திய அணி பாகிஸ்தானை விட சிறந்த அணி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாட்காஸ்டர் லெக்ஸ் பிரிட்மேனிடம் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி இதனைத் தெரிவித்தார்.இதை... மேலும் பார்க்க

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 149 ரன்கள் இலக்கு!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்துள்ளது.சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி ரா... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸின் கேப்டன் அக்‌ஷர் படேல் குறித்து மனம் திறந்த அபிஷேக் போரெல்!

தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்‌ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து அபிஷேக் போரெல் பேசியுள்ளார்.ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொ... மேலும் பார்க்க

ரஞ்சி கோப்பை அதிரடியை ஐபிஎல் தொடரிலும் தொடர காத்திருக்கும் கருண் நாயர்!

உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. ரஞ்சி தொடரில் விதர்பா அண... மேலும் பார்க்க

சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டி குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசியுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் த... மேலும் பார்க்க

பிசிசியின் விதிமுறைகள் வருத்தமளிக்கின்றன: விராட் கோலி

குடும்பங்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை விராட் கோலி ஆதரித்து பேசியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும், அணியில் ஒழுக்கம், ஒற்றுமை ஆக... மேலும் பார்க்க