செய்திகள் :

இந்திய அணி பாகிஸ்தானை விட சிறந்த அணி: பிரதமர் மோடி

post image

இந்திய அணி பாகிஸ்தானை விட சிறந்த அணி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாட்காஸ்டர் லெக்ஸ் பிரிட்மேனிடம் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி இதனைத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: தில்லி கேபிடல்ஸின் கேப்டன் அக்‌ஷர் படேல் குறித்து மனம் திறந்த அபிஷேக் போரெல்!

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நான் கிரிக்கெட்டில் அனுபவசாலி கிடையாது. கிரிக்கெட்டில் உள்ள நுணுக்கங்கள் குறித்து எனக்குத் தெரியாது. எந்த அணி சிறந்த அணி என்பதை கிரிக்கெட்டின் நுணுக்கங்கள் தெரிந்தவர்கள்தான் கூற வேண்டும். ஆனால், சில நாள்களுக்கு முன்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடின. அந்தப் போட்டியின் முடிவுகள் எந்த அணி சிறந்த அணி என்பதை வெளிக்கொணர்ந்தது.

இதையும் படிக்க: ரஞ்சி கோப்பை அதிரடியை ஐபிஎல் தொடரிலும் தொடர காத்திருக்கும் கருண் நாயர்!

ஒட்டுமொத்த உலகையும் உற்சாகமாக வைத்திருக்கும் ஆற்றல் விளையாட்டுக்கு இருக்கிறது என நினைக்கிறேன். விளையாட்டில் கடைபிடிக்கப்படும் நேர்மை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களை ஒன்றிணைக்கிறது. அதனால், நான் எப்போதும் விளையாட்டை குறைவாக மதிப்பிடமாட்டேன். மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியில் விளையாட்டு மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக நான் நம்புகிறேன். விளையாட்டு வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது மக்களை ஒன்றிணைக்கிறது என்றார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான குரூப் ஸ்டேஜ் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 149 ரன்கள் இலக்கு!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்துள்ளது.சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி ரா... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸின் கேப்டன் அக்‌ஷர் படேல் குறித்து மனம் திறந்த அபிஷேக் போரெல்!

தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்‌ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து அபிஷேக் போரெல் பேசியுள்ளார்.ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொ... மேலும் பார்க்க

ரஞ்சி கோப்பை அதிரடியை ஐபிஎல் தொடரிலும் தொடர காத்திருக்கும் கருண் நாயர்!

உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. ரஞ்சி தொடரில் விதர்பா அண... மேலும் பார்க்க

சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டி குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசியுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் த... மேலும் பார்க்க

இந்திய அணி வீரர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயணிப்பது சரியா? விராட் கோலி பதில்!

இந்திய அணி வீரர்கள் கிரிக்கெட் தொடர்களுக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அவர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயணிப்பது குறித்து இந்திய அணியின் விராட் கோலி பேசியுள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரா... மேலும் பார்க்க

பிசிசியின் விதிமுறைகள் வருத்தமளிக்கின்றன: விராட் கோலி

குடும்பங்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை விராட் கோலி ஆதரித்து பேசியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும், அணியில் ஒழுக்கம், ஒற்றுமை ஆக... மேலும் பார்க்க