செய்திகள் :

பிசிசியின் விதிமுறைகள் வருத்தமளிக்கின்றன: விராட் கோலி

post image

குடும்பங்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை விராட் கோலி ஆதரித்து பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும், அணியில் ஒழுக்கம், ஒற்றுமை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையிலும் புதிதாக கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்துள்ளது.

தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் பரிந்துரை அடிப்படையிலான உள்நாட்டு கிரிக்கெட்டில் கட்டாயம் விளையாடுவது, போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் போது குடும்பத்தினருக்கு குறைந்த நாட்களே அனுமதி போன்றவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

இந்நிலையில் 36 வயதாகும் விராட் கோலி பேசியதாவது:

குடும்பத்தின் பங்கினை மக்களுக்கு விவரிப்பது மிகவும் கடினமானது. வெளியே எதாவது தீவிரமாக நடந்தால் நாம் குடும்பத்திடம்தாம் செல்ல வேண்டியிருக்கிறது.

குடும்பம் என்னமாதிரியான மதிப்புகளைக் கொண்டு வருகிறதென மக்களுக்கு புரியுமெனத் தெரியவில்லை.

நான் எனது அறைக்கு செல்ல விரும்பவில்லை. தனியாக உட்கார்ந்து எனது கோபத்தை வெளிக்காட்டும்படி அமைதியாக உட்காருவேன். நான் இயல்பாக இருப்பதாகக் காட்டிக்கொள்கிறேன். பிறகு உங்களது போட்டியை பொறுப்புடன் எடுத்துக்கொள்வீர்கள்.

இதை அப்படியே எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஆனால், உண்மையில் நீங்கள் உங்கள் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது உங்களுக்கு குடும்பம் என்ற ஒன்று இருக்கும். ஒரு இயல்பான வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்.

அதனால், எனக்கு அதுதான் அதீத இன்பத்தைத்தரும். எனக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் குடும்பத்துடனே நேரம் செலவிட முயல்கிறேன்.

பிசிசிஐயின் இந்த முடிவு எனக்கு வருத்தமளிக்கக் கூடியதாக இருந்தது. என்ன நடந்ததோ அதற்கு காரணமே இல்லாமல் இதை விவாதத்துக்கு கொண்டுவந்துள்ளார்கள். அவர்களுக்கு குடும்பத்தை தள்ளி வைக்க வேண்டும் என்பதால் அப்படி செய்துள்ளார்கள்.

உங்களுக்கு குடும்பத்தினருடன் இருப்பது எப்போதும் பிடிக்குமா? என்று நீங்கள் எந்த வீரரையாவது கேட்டுப் பாருங்கள். அனைவரும் ‘ஆமாம்’ என்பார்கள்.

உடல்நிலை குறித்த பார்வையில் அணியின் முடிவுகள் கடினமாக இருக்காது. எனது அம்மாவை சமாதானப்படுத்துவதுதான் கடினம்.

நான் பரோட்டா சாப்பிடாமல் ஆடுகளத்தில் பலவீனமாக இருந்தாக அவர் மிகவும் வருத்தப்படுவார்.

உங்களுக்குத் தெரியுமா? என்னிடம் வெளிநாட்டு வீரர்கள் பலர் இந்தப் பயிற்சிகள் குறித்து கேட்கிறார்கள். நான் எப்படி இப்படி ஃபிட்டாக இருக்கிறேனெக் கேட்கிறார்கள். ஆனால், நீங்கள் என்னை பலவீனமாக இருப்பதாகச் சொல்லுகிறீர்களே அம்மா?. அப்படித்தான் நான் எனது அம்மாவை சமாளிப்பேன்.

நான் உடல்நிலை சரியில்லாமல் இல்லை. கவலைப்படாதீர்கள் அம்மா என்பேன். இதுதான் எனக்கு கடினம் என்றார்.

தில்லி கேபிடல்ஸின் கேப்டன் அக்‌ஷர் படேல் குறித்து மனம் திறந்த அபிஷேக் போரெல்!

தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்‌ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து அபிஷேக் போரெல் பேசியுள்ளார்.ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொ... மேலும் பார்க்க

ரஞ்சி கோப்பை அதிரடியை ஐபிஎல் தொடரிலும் தொடர காத்திருக்கும் கருண் நாயர்!

உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. ரஞ்சி தொடரில் விதர்பா அண... மேலும் பார்க்க

சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டி குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசியுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் த... மேலும் பார்க்க

இந்திய அணி வீரர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயணிப்பது சரியா? விராட் கோலி பதில்!

இந்திய அணி வீரர்கள் கிரிக்கெட் தொடர்களுக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அவர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயணிப்பது குறித்து இந்திய அணியின் விராட் கோலி பேசியுள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரா... மேலும் பார்க்க

டபிள்யூபிஎல்: 3-ஆவது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற தில்லி..! பயிற்சியாளர் கூறியதென்ன?

மகளிர் பிரீமியர் லீக்கில் பரபரப்பான இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தில்லி அணி 141/9 ரன்க... மேலும் பார்க்க

லா லீகா தொடர்: எம்பாப்பே 2 கோல்கள், ரியல் மாட்ரிட் முதலிடம்!

லா லீகா கால்பந்து தொடரில் வில்லார்ரியல் அணியுடன் மோதிய ரியல் மாட்ரிட் அணி 2-1 என வென்றது.வில்லார்ரியல் அணியின் வீரர் ஜுவான் போய்த் 7ஆவது நிமிஷத்தில் முதல் கோல் அடித்தார். 2 கோல்கள் அடித்த எம்பாப்பேஅடு... மேலும் பார்க்க