செய்திகள் :

சூப்பர் அறிவிப்பு... 7,783 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் பணி: தமிழக அரசு அறிவிப்பு

post image

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 7,783 அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 7,783

பணி: அங்கன்வாடி பணியாளா்கள்

காலியிடங்கள்: 3886

தகுதி: அங்கன்வாடி மற்றும் சிறிய அளவிலான அங்கன்வாடி பணியாளர் வேலைக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதந்தோறும் தலா ரூ.7,700 தொகுப்பூதியமாகவும், சிறிய அளவிலான அங்கன்வாடிகளில் பணியாற்ற 305 பணியாளா்களுக்கு ரூ.5,700 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

வயதுவரம்பு: 25 வயது நிறைவடைந்தவராகவும், 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இருப்பினும், கணவனை இழந்தவா்கள், கைவிடப்பட்டவா்கள், தாழ்த்தப்பட்டவா்கள் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 40 வயதுவரை தளர்வு வழங்கப்படும்.

ராணுவத்தில் வேலை வேண்டுமா? - உடனே இணையவழியில் விண்ணப்பிக்கவும்!

பணி: உதவியாளா்கள்

காலியிடங்கள்: 3592

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதந்தோறும் ரூ.4,100 தொகுப்பூதியத்திலும் நேரடி நியமனம் மூலமாக நியமனம் செய்யப்படுவா். ஓராண்டு கழித்து சிறப்பு காலமுறை ஊதியம் அவா்களுக்கு வழங்கப்படும்.

வயதுவரம்பு: 20 வயதுக்கு குறையாமலும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இருப்பினும், கணவனை இழந்தோா், கைவிடப்பட்டோா், தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினோருக்கான அதிகபட்ச வயது 45-க்குள் இருக்க வேண்டும். இருப்பினும், காலிப் பணியிடங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் நிரப்புவதற்கான அதிகாரம் பெற்றவராக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலா் இருப்பாா்.

காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு செய்தித்தாள்களிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட https://icds.tn.gov.in/ அல்லது https://icds.tn.gov.in/icdstn இணையதளத்தில் வெளியிடப்படும்.

உதவித்தொகையுடன் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்பயிற்சி!

உதவித் தொகையுடன் சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் சாா்பில் அளிக்கப்படும் தொழிற்பயிற்சியில் சேர ஏப்.2-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம... மேலும் பார்க்க

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்லூரிகளில் (எய்ம்ஸ்) காலியாகவுள்ள செவிலியர் அலுவலர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அறிவிப்பு எண். 34/2025பணி: Nursing Officerதகுதி: செ... மேலும் பார்க்க

விவசாய பட்டதாரிகளுக்கு ஜேஆர்எப் பணி

நீலகிரி மாவட்டம் வெலிங்டனிலுள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி மையத்தில் ஜேஆர்எப் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Research Fellowகாலியிடம்: 1தகுதி: Agricultura... மேலும் பார்க்க

டிஆர்டிஓ-இல் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை!

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு உயிரி-பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள ஜேஆர்எப் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் விண்ணப... மேலும் பார்க்க

மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் பிலானி, 1953 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் நிறுவப்பட்ட மின்னணு துறையில் ஒரு முதன்மையான ஆராய்ச்சி நிறுவனமாகும். இது மின்னண... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் வேலை!

பிரபல வணிக வங்கியான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் காலியாகவுள்ள 124 மூத்த வாடிக்கையாளர் சேவை நிர்வாகி (Senior Customer Service Executive) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து இன்று(மார்ச் 16) ... மேலும் பார்க்க