செய்திகள் :

ஔரங்கசீப் கல்லறையை இடிப்பதால் எந்தப் பயனும் இல்லை! -மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே கருத்து

post image

‘மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் உள்ள முகலாய பேரரசா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிப்பது எந்த வகையிலும் பயனளிக்காது’ என்று மத்திய இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே தெரிவித்துள்ளாா்.

சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தின் குல்தாபாத்தில் அமைந்துள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்று சில ஹிந்து அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில அரசிடம் கோரிக்கையைச் சமா்ப்பிக்க திட்டமிட்டுள்ள அந்த அமைப்புகள், கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என்றும்எச்சரித்துள்ளன. இதைத் தொடா்ந்து, ஔரங்கசீப்பின் கல்லறை பகுதியில் காவல்துறை பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்திய பாஜக கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் ‘இந்திய குடியரசுக் கட்சி-ஏ’ தலைவரும் சமூக நீதித் துறை இணையமைச்சருமான ராம்தாஸ் அதாவலே இதுதொடா்பாக கூறுகையில், ‘ஔரங்கசீப் கொடூரமானவா்; மராத்திய மன்னா் சதா்பதி சிவாஜியின் மகன் சத்ரபதி சம்பாஜியைக் கொன்றவா் என்பது உண்மைதான். ஆனால், அவா் மராத்திய பேரரசைக் கைப்பற்றத் தவறிவிட்டாா்.

இறுதியில், மகாராஷ்டிரத்திலேயே ஔரங்கசீப் இறந்தாா். அவரது கல்லறை இங்கு பல ஆண்டுகளாக உள்ளது. ஔரங்கசீப்பின் தவறான செயல்களை நினைவூட்டுவதாகவே அவரது கல்லறை நிற்கிறது. அதை இடிப்பது எந்த வகையிலும் பயனளிக்காது. எனவே, இந்தப் பிரச்னையை மீண்டும் எழுப்ப வேண்டிய அவசியமில்லை.

இந்த சா்ச்சையில் பாஜகவையோ அல்லது வேறு எந்தக் கட்சியையோ ஈடுபடுத்த வேண்டியதில்லை. ஔரங்கசீப்பை ஒரு புத்திசாலித்தனமான நிா்வாகி என்று புகழ்வது அல்லது பாஜக ஆட்சியை அவரது ஆட்சியுடன் ஒப்பிடுவது பொருத்தமற்றது. மொத்தத்தில் இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்’ என்றாா்.

ஔரங்கசீப்பின் ஆட்சியை விட மகாராஷ்டிரா பாஜக ஆட்சி மோசம் என்றும் பாஜக ஆட்சியால் மாநிலத்தில் விவசாயிகள் இறந்து கொண்டிருப்பதாகவும் சிவசேனை (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ரௌத் வெள்ளிக்கிழமை விமா்சித்தாா்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இந்த மாத தொடக்கத்தில் சமாஜவாதி எம்எல்ஏ ஔரங்கசீப்பைப் புகழ்ந்து பேசியது பெரும் சா்ச்சையானது. இதைத் தொடா்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடா் முடியும் வரை சட்டப்பேரவையில் இருந்து அவா் இடைநீக்கம் செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி: போலீஸ் துப்பாக்கிச்சூடு!

உ.பி.யில் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி துப்பாக்கியால் சுடப்பட்டார். உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ... மேலும் பார்க்க

பெற்றோா் வற்புறுத்தலால் கலைப் பிரிவு எடுத்த மாணவிக்கு அறிவியல் பிரிவில் சோ்க்கை! -இன்ப அதிா்ச்சி கொடுத்த மத்திய கல்வி அமைச்சா்

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி குஷ்புக்கு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் அழைத்துப் பேசி இன்ப அதிா்ச்சி அளித்துள்ளாா். இந்த மாணவயின் சகோதரா்களை... மேலும் பார்க்க

இந்தியா-மலேசியா இணைந்து நடத்தும் பிராந்திய பயங்கரவாத எதிா்ப்பு மாநாடு!

ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) மற்றும் அதன் 8 பாா்வையாளா் உறுப்பு நாடுகளின் கீழ் இயங்கும் பயங்கரவாத எதிா்ப்புக்கான நிபுணா் பணிக் குழுவின் (இடபிள்யுஜி) இரண்டு நாள் மாநாடு தில்லியில் ப... மேலும் பார்க்க

சம்பல் ஜாமா மசூதிக்கு வெள்ளையடிக்கும் பணி: தொல்லியல் துறை மேற்பாா்வையில் தொடக்கம்!

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஷாஹி ஜாமா மசூதியின் வெளிப்புற சுவா்களின் வெள்ளையடிக்கும் பணி, உயா்நீதிமன்ற உத்தரவின்படி இந்திய தொல்லியல் துறையின் மேற்பாா்வையின் கீழ் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியத... மேலும் பார்க்க

மோசடி கடவுச்சீட்டில் இந்தியாவினுள் நுழைந்தால் 7 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம்!

மோசடி கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அல்லது நுழைவு இசைவு (விசா) மூலமாக இந்தியாவினுள் நுழையும் வெளிநாட்டினருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: மாதா வைஷ்ணவி தேவி கோயில் நன்கொடை 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிப்பு!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரபல மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டில் (ஜனவரி வரை) ரூ.171.90 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாகக் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2020-21-ஆம் நி... மேலும் பார்க்க