செய்திகள் :

பாகிஸ்தானில் ராணுவ வாகனங்கள் மீது தற்கொலைப்படைத் தாக்குதல்! -90 வீரர்கள் பலி?

post image

இஸ்லாமாபாத் : தென்மேற்கு பாகிஸ்தானில் க்வெட்டாவிலிருந்து ஈரானிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள டாஃப்டான் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த ராணுவ பாதுகாப்புப் படை வாகனங்களை குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 16) பிரிவினைவாத பயங்கரவாத குழுக்கள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவப் படையினர் 7 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாஷ்கி பகுதியில் ஒரு காரில் வெடி பொருள்களை ஏற்றிக் கொண்டு வந்த பலோச் இயக்க பயங்கரவாதிகள், அவ்வழியாக ராணுவ பேருந்துகளில் சென்று கொண்டிருந்த துணை ராணுவ படையினரைக் குரிவைத்து அந்த காரை பேருந்துகளின் மீது மோதி வெடிக்கச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 90 வீரர்கள் வரை கொல்லப்பட்டதாக பலோச் விடுதலைப் படை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பலோச் விடுதலைப் படை(பி.எல்.ஏ) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 35 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, இதே பயங்கரவாத இயக்கம், கடந்த செவ்வாய்க்கிழமை 450 பயணிகளுடன் சென்ற ரயிலை கடத்திய நிலையில், அதனைத்தொடர்ந்து ராணுவத்தினர் அந்த பயங்கரவாதிகளைக் கொன்று ரயில் பயணிகளை மீட்ட சம்பவம் நடந்தது. இந்த நிலையில், அடுத்தடுத்த வாரங்களில் பலோச் பிரிவினைவாத பயங்கரவாதிகள் தீவிர தாக்குதல்களை நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு மாசிடோனியாவில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: 50 பேர் பலி!

ஐரோப்பிய தேசமான வடக்கு மாசிடோனியாவில் செயல்பட்டு வந்த இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 50 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 16) அதிக... மேலும் பார்க்க

சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்த டிராகன் விண்கலம்!

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர அனுப்பப்பட்டுள்ள டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்துள்ளது. இந்த விண்கலம் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 16) காலை 10 மணியளவில் சர்வத... மேலும் பார்க்க

காஸாவில் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னும் இஸ்ரேல் தாக்குதல்: 150 பேர் உயிரிழப்பு!

காஸாவில் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின் இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள தாக்குதல்களில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த இரு வாரங்களில் மட்டும் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று காஸா ஊடக ... மேலும் பார்க்க

கனடா: புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்களுக்கு பதவி!

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அமைச்சரவையில் இந்திய வம்சாவளிப் பெண்கள் இருவருக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ மீது பொதுமக்களுக்கும், ஆளும் லிபரல் கட்ச... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா வான் வழி தாக்குதல்: 24 பேர் பலி!

யேமன் நாட்டில் அமெரிக்க படைகள் வான் வழி தாக்குதலை நிகழ்த்தியுள்ளன. இந்த தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.யேமன் தலைநகர் சனாவில் சனிக்கிழமை(மார்ச் 15) நடத்தப்பட்டுள்ள தாக்குதலில்... மேலும் பார்க்க

இராக்கில் ஐ.எஸ். முக்கிய தலைவா் படுகொலை: அமெரிக்கா

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் இரண்டாம் நிலை தலைவா் அபு காதிஜா, இராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டது தற்போது உறுதியாகியுள்ளது.இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் இராக் பிர... மேலும் பார்க்க