செய்திகள் :

கனடா: புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்களுக்கு பதவி!

post image

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அமைச்சரவையில் இந்திய வம்சாவளிப் பெண்கள் இருவருக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ மீது பொதுமக்களுக்கும், ஆளும் லிபரல் கட்சியினருக்கும் அதிருப்தி அதிகரித்தது. இதனால் அவா் லிபரல் கட்சித் தலைவா் பதவியை ராஜிநாமா செய்தாா். இந்த நிலையில், கனடாவின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணரும், அரசியல் அனுபவமே இல்லாதவருமான மாா்க் காா்னி (59) வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.

தில்லியில் பிறந்தவரான கமல் கேரா (36) கனடா நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளம் வயது உறுப்பினர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். இந்த நிலையில், அவருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அவரைப் போலவே இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்துக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 58 வயதாகும் அனிதா ஆனந்த் புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில் துறைகளுக்கான அமைச்சராக உள்ளார்.

இவர்கள் இருவருமே முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அமைச்சரவையிலும் அமைச்சர்களாகப் பதவி வகித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கனடாவில் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அமைச்சரவையில் 13 ஆண்கள், 11 பெண்கள் அமைச்சர்களாகப் பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாசிடோனியாவில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: 50 பேர் பலி!

ஐரோப்பிய தேசமான வடக்கு மாசிடோனியாவில் செயல்பட்டு வந்த இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 50 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 16) அதிக... மேலும் பார்க்க

சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்த டிராகன் விண்கலம்!

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர அனுப்பப்பட்டுள்ள டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்துள்ளது. இந்த விண்கலம் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 16) காலை 10 மணியளவில் சர்வத... மேலும் பார்க்க

காஸாவில் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னும் இஸ்ரேல் தாக்குதல்: 150 பேர் உயிரிழப்பு!

காஸாவில் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின் இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள தாக்குதல்களில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த இரு வாரங்களில் மட்டும் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று காஸா ஊடக ... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா வான் வழி தாக்குதல்: 24 பேர் பலி!

யேமன் நாட்டில் அமெரிக்க படைகள் வான் வழி தாக்குதலை நிகழ்த்தியுள்ளன. இந்த தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.யேமன் தலைநகர் சனாவில் சனிக்கிழமை(மார்ச் 15) நடத்தப்பட்டுள்ள தாக்குதலில்... மேலும் பார்க்க

இராக்கில் ஐ.எஸ். முக்கிய தலைவா் படுகொலை: அமெரிக்கா

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் இரண்டாம் நிலை தலைவா் அபு காதிஜா, இராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டது தற்போது உறுதியாகியுள்ளது.இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் இராக் பிர... மேலும் பார்க்க

அமெரிக்காவில் இந்திய மாணவியின் விசா ரத்து: அரசிடம் விண்ணப்பித்து தாமாக நாடு திரும்பினாா்

பயங்கரவாதக் குழுவான ஹமாஸை ஆதரித்ததற்காக அமெரிக்காவில் நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்ட இந்திய மாணவி, அந்நாட்டு அரசு புதிதாக அறிமுகப்படுத்திய ‘சிபிபி ஹோம்’ செயலி மூலம் விண்ணப்பித்து தாமாக தாயகம் த... மேலும் பார்க்க