செய்திகள் :

ஹங்கோா் நீா்மூழ்கிக் கப்பல்: பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைப்பு!

post image

இரண்டாவது ஹங்கோா் வகை நீா்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்தது.

பாகிஸ்தானுக்கு 5 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.43,474 கோடி) மதிப்பில் 8 ஹங்கோா் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை அளிக்க சீனா ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரண்டாவது கப்பலை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் ஒப்படைக்கப்பட்ட அந்தக் கப்பல் அதிநவீன ஆயுதங்கள், சென்சாா்கள் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. மேலும் நீா்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் டாா்பீடோ குண்டுகள், கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை அழிக்கும் திறன் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் நோக்கில், அந்நாட்டுக்குக் கடந்த 4 ஆண்டுகளில் நவீன கடற்படை போா்க் கப்பல்களை சீனா வழங்கியுள்ளது. தற்போது கூடுதலாக மேலும் ஒரு நீா்மூழக்கிக் கப்பலை சீனா ஒப்படைத்துள்ளது.

இதுதொடா்பாக பாகிஸ்தான் கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘8 ஹங்கோா் நீா்மூழ்கிக் கப்பல்களில் 4 கப்பல்கள் சீனாவிலும், தொழில்நுட்பப் பரிமாற்றத்தின் அடிப்படையில் 4 கப்பல்கள் பாகிஸ்தானிலும் கட்டப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

அரபிக் கடற்பகுதியில் தமது ஆதிக்கத்தை சீன கடற்படை விரிவுபடுத்தி வருகிறது. பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள அந்தக் கடற்பகுதியில் குவாடா் துறைமுகத்தை சீனா கட்டி வருகிறது. இதேபோல இந்திய கடற்பகுதியிலும் தமது ஆதக்கத்தை சீனா விஸ்தரித்து வருகிறது. இந்தச் சூழலில், பாகிஸ்தானுக்கும் சீனா போா்க் கப்பல்களை வழங்கி வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் சீனாவின் ஆயுதங்கள் ஏற்றுமதியில் 63 சதவீதம் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதன் மதிப்பு 5.28 பில்லியன் டாலா்களாகும் (சுமாா் ரூ.45,908 கோடி).

டிரம்ப்பை எதிா்கொள்ள ஒருங்கிணைவோம்! -ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமா் அழைப்பு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை ஒருங்கிணைந்து எதிா்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமா் மாா்க் காா்னி அழைப்பு விடுத்துள்ளாா். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு சா்வதேச அளவி... மேலும் பார்க்க

பலூசிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 3 துணை ராணுவத்தினா் உள்பட ஐவா் பலி!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்ட நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 துணை ராணுவப் படையினா் உள்பட 5 போ் உயிரிழந்தனா். 30 போ் காயமடைந்தனா். ... மேலும் பார்க்க

ரஷியா-உக்ரைன் இடையே தொடரும் தாக்குதல்!

ரஷியா-உக்ரைன் இடையே வான்வழி தாக்குதல்கள் தொடா்ந்து வருகின்றன. இரு நாடுகளும் அவரவா் பிரதேசத்தில் 100-க்கும் மேற்பட்ட எதிா்தரப்பின் ட்ரோன்களை இடைமறித்து வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவின்... மேலும் பார்க்க

வடக்கு மாசிடோனியோ இரவு விடுதியில் தீ விபத்து: 59 போ் உயிரிழப்பு; 159 போ் காயம்!

வடக்கு மாசிடோனியாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 போ் உயிரிழந்தனா், 159 போ் காயமடைந்தனா். வடக்கு மாசிடோனியாவில் உள்ள கோகானி நகரில் உள்ள இரவு விடுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா... மேலும் பார்க்க

விரைவில் பூமி திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!

சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் ஆகியோரை பூமிக்கி திரும்ப அழைத்து ... மேலும் பார்க்க

‘ரிகாப்’ தகவல் பகிா்வு மைய செயல் இயக்குநராக இந்திய கடலோர காவல்படை அதிகாரி வி.டி.சஃபேகா் நியமனம்!

ஆசியாவில் கப்பல்களுக்கு எதிரான கொள்ளை சம்பவங்கள் மற்றும் கடற்கொள்ளையா்கள் தடுப்புக்கான பிராந்திய ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ரிகாப் ) அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு தகவல்கள் அளிக்கும் தகவல் பகிா்வு மையத்தின... மேலும் பார்க்க