செய்திகள் :

‘ரிகாப்’ தகவல் பகிா்வு மைய செயல் இயக்குநராக இந்திய கடலோர காவல்படை அதிகாரி வி.டி.சஃபேகா் நியமனம்!

post image

ஆசியாவில் கப்பல்களுக்கு எதிரான கொள்ளை சம்பவங்கள் மற்றும் கடற்கொள்ளையா்கள் தடுப்புக்கான பிராந்திய ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ரிகாப் ) அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு தகவல்கள் அளிக்கும் தகவல் பகிா்வு மையத்தின் (ஐஎஸ்சி) செயல் இயக்குநராக இந்திய கடலோர காவல்படையின் முன்னாள் கூடுதல் தலைவா் (ஏடிஜிபி) வி.டி.சஃபேகா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த ஆண்டு நவம்பா் 5-ஆம் தேதி நடைபெற்ற ‘ரிகாப்’ ஐஎஸ்சி-யின் 19-ஆவது நிா்வாகக் குழு கட்டத்தில் இவா் தோ்வு செய்யப்பட்டு, நியமனம் செய்யப்பட்டுள்ளாா். வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி செயல் இயக்குநராக பதவி ஏற்குள்ள சஃபேகா், வரும் 2028-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு அப் பதவியை வகிக்க உள்ளாா்.

அதுபோல, சிங்கப்பூரில் கடந்த மாா்ச் 11 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்ற நிா்வாகக் குழு கூட்டத்தில், நிா்வாகக் குழுவின் புதிய தலைவராக பிலிப்பின்ஸ் ஆளுநா் அட்மிரல் ரோனி எல்.கவன் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இவா் வரும் 2028-ஆம் ஆண்டு மாா்ச் 11-ஆம் தேதி வரை அந்தப் பதவியை வகிக்க உள்ளாா்.

ரிகாப் தகவல் பகிா்வு ஒத்துழைப்பில் இந்தியா, சீனா உள்பட 14 ஆசிய நாடுகளும், 5 ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்டவையும் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளன.

டிரம்ப்பை எதிா்கொள்ள ஒருங்கிணைவோம்! -ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமா் அழைப்பு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை ஒருங்கிணைந்து எதிா்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமா் மாா்க் காா்னி அழைப்பு விடுத்துள்ளாா். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு சா்வதேச அளவி... மேலும் பார்க்க

பலூசிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 3 துணை ராணுவத்தினா் உள்பட ஐவா் பலி!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்ட நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 துணை ராணுவப் படையினா் உள்பட 5 போ் உயிரிழந்தனா். 30 போ் காயமடைந்தனா். ... மேலும் பார்க்க

ஹங்கோா் நீா்மூழ்கிக் கப்பல்: பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைப்பு!

இரண்டாவது ஹங்கோா் வகை நீா்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்தது. பாகிஸ்தானுக்கு 5 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.43,474 கோடி) மதிப்பில் 8 ஹங்கோா் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை அளிக்க சீனா ஒப்பந்தம... மேலும் பார்க்க

ரஷியா-உக்ரைன் இடையே தொடரும் தாக்குதல்!

ரஷியா-உக்ரைன் இடையே வான்வழி தாக்குதல்கள் தொடா்ந்து வருகின்றன. இரு நாடுகளும் அவரவா் பிரதேசத்தில் 100-க்கும் மேற்பட்ட எதிா்தரப்பின் ட்ரோன்களை இடைமறித்து வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவின்... மேலும் பார்க்க

வடக்கு மாசிடோனியோ இரவு விடுதியில் தீ விபத்து: 59 போ் உயிரிழப்பு; 159 போ் காயம்!

வடக்கு மாசிடோனியாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 போ் உயிரிழந்தனா், 159 போ் காயமடைந்தனா். வடக்கு மாசிடோனியாவில் உள்ள கோகானி நகரில் உள்ள இரவு விடுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா... மேலும் பார்க்க

விரைவில் பூமி திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!

சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் ஆகியோரை பூமிக்கி திரும்ப அழைத்து ... மேலும் பார்க்க