செய்திகள் :

மீரட்டில் பல்கலை.யின் திறந்தவெளியில் தொழுகை நடத்தியதாக மாணவர் கைது

post image

மீரட்டில் உள்ள பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி வளாகத்தில் தொழுகை நடத்தியதாக மாணவர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் ஹோலி கொண்டாட்டங்களையொட்டி தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் குழு ஒன்று தொழுகை நடத்தியதாகக் கூறப்படும் விடியோ வெளியானது.

இதைத்தொடர்ந்து இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. பின்னர் இதுகுறித்து கங்கா நகர் காவல் நிலையத்தில் கார்த்திக் சனிக்கிழமை புகார் அளித்தார். புகாரையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாணவர் காலித் பிரதானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பிரதான் மற்றும் மூன்று பாதுகாப்புப் பணியாளர்களை இடைநீக்கம் செய்து பல்கலைக்கழக நிர்வாகமும் நடவடிக்கை எடுத்துள்ளது.

கூட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இருந்ததையும், ஹோலியின் போது விடியோ வைரலானதை காரணம் காட்டி, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யுமாறு உள்ளூர் இந்து குழுக்கள் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வணிக ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே தடையற்ற வணிக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கும் நியூ... மேலும் பார்க்க

வளர்ச்சிப் பாதையில் வடகிழக்கு மாநிலங்கள்: அமித் ஷா

கிளர்ச்சி, வன்முறை போன்ற பிரச்னைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லப்பட்டுள்ளதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.அஸ்ஸாம் மாநிலத்தின் க... மேலும் பார்க்க

வாழ்க்கையின் நோக்கத்தை அறிய உதவியது ஆர்.எஸ்.எஸ்: மோடி

வாழ்க்கையின் நோக்கத்தை அறிய ஆர்.எஸ்.எஸ். தனக்கு உதவியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். செய்யறிவு தொழில்நுட்ப ஆய்வாளர் லெக்ஸ் ஃபிரிட்மேன் உடனான நேர்காணலின்போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏஐ குறித்த... மேலும் பார்க்க

கேதர்நாத் யாத்திரை: ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்குத் தடை விதிக்க பாஜக கோரிக்கை!

கேதர்நாத் யாத்திரை செல்பவர்களில் ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு தடை விதிக்க பாஜக கோரிக்கை வைத்துள்ளது. கேதார்நாத் யாத்திரை தொடர்பான மேலாண்மை கூட்டம் இன்று நடைபெற்றது. கேதர்நாத் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக... மேலும் பார்க்க

லல்லு பிரசாத்தின் மகனுக்கு ரூ.4,000 அபராதம் விதிப்பு

லல்லு பிரசாத் யாதவின் மகனுக்கு பிகார் போக்குவரத்து காவல்துறை ரூ.4,000 அபராதம் விதித்துள்ளது. லல்லு பிரசாத் யாதவின் மூத்த மகனும் முன்னாள் சுகாதார அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் சனிக்கிழமை பாட்னாவில் உள... மேலும் பார்க்க

ரூ. 375 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய வெளிநாட்டுப் பெண்கள் கைது!

கர்நாடக காவல்துறை வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில், இரு பெண்களைக் கைது செய்த மங்களூர் நகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தில... மேலும் பார்க்க