செய்திகள் :

லல்லு பிரசாத்தின் மகனுக்கு ரூ.4,000 அபராதம் விதிப்பு

post image

லல்லு பிரசாத் யாதவின் மகனுக்கு பிகார் போக்குவரத்து காவல்துறை ரூ.4,000 அபராதம் விதித்துள்ளது.

லல்லு பிரசாத் யாதவின் மூத்த மகனும் முன்னாள் சுகாதார அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் சனிக்கிழமை பாட்னாவில் உள்ள பிகார் முதல்வரின் இல்லத்திற்கு வெளியே ஹோலி கொண்டாடினார். அப்போது இருசக்கர வாகனத்திலும் பயணம் மேற்கொண்டார். இதுதொடர்பான விடியா இணையதளங்களில் வைரானது.

இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பயணம் மேற்கொண்டதாக தேஜ் பிரதாப் யாதவ் மீது புகார் எழுந்தது. இந்த புகாரையடுத்து ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ததாக அவருக்கு எதிராக பிகார் போக்குவரத்து காவல்துறை ரூ.4,000 அபராதம் விதித்துள்ளது.

தமிழ்நாட்டிலேயே தேர்வர்களுக்கான மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்- இபிஎஸ்

மேலும் அவர் பயணித்த இருசக்கரவாகனத்தின் காப்பீடு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழும் காலாவதியாகியிருந்தது என்று போக்குவரத்து காவல்துறை அதிகாரி பிரஜேஷ் குமார் சௌகான் தெரிவித்துள்ளார். இதனிடையே தேஜ் பிரதாப் யாதவின் மெய்க்காப்பாளர் பணியில் இருந்து காவலர் தீபக் குமார் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டார்.

எம்எல்ஏ தேஜ் பிரதாப் யாதவின் அறிவுறுத்தலின் பேரில் அவர் பொதுஇடத்தில் நடனமாடியதாகக் கூறப்படும் பிடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து பிகார் காவல்துறை அவர் மீது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

வாழ்க்கையின் நோக்கத்தை அறிய உதவியது ஆர்.எஸ்.எஸ்: மோடி

வாழ்க்கையின் நோக்கத்தை அறிய ஆர்.எஸ்.எஸ். தனக்கு உதவியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். செய்யறிவு தொழில்நுட்ப ஆய்வாளர் லெக்ஸ் ஃபிரிட்மேன் உடனான நேர்காணலின்போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏஐ குறித்த... மேலும் பார்க்க

கேதர்நாத் யாத்திரை: ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்குத் தடை விதிக்க பாஜக கோரிக்கை!

கேதர்நாத் யாத்திரை செல்பவர்களில் ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு தடை விதிக்க பாஜக கோரிக்கை வைத்துள்ளது. கேதார்நாத் யாத்திரை தொடர்பான மேலாண்மை கூட்டம் இன்று நடைபெற்றது. கேதர்நாத் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக... மேலும் பார்க்க

மீரட்டில் பல்கலை.யின் திறந்தவெளியில் தொழுகை நடத்தியதாக மாணவர் கைது

மீரட்டில் உள்ள பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி வளாகத்தில் தொழுகை நடத்தியதாக மாணவர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் ஹோலி கொண்டாட்டங்களையொட்டி தனியார் பல்கலைக்கழக வளாகத்தில... மேலும் பார்க்க

ரூ. 375 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய வெளிநாட்டுப் பெண்கள் கைது!

கர்நாடக காவல்துறை வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில், இரு பெண்களைக் கைது செய்த மங்களூர் நகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தில... மேலும் பார்க்க

ஆந்திரம்: மதுபோதையில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட நபரால் பரபரப்பு!

ஆந்திரத்தில் மதுபோதையில் அரசுப் பேருந்திற்கு கீழ் உள்ள ஸ்டெப்னி டயரில் பயணி ஒருவர் தொங்கியபடி பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியிலிருந்து சத்ய சாய் மாவட்டத்தில் ... மேலும் பார்க்க

முஸ்லிம்களுக்கு கல்வி மிகவும் தேவைப்படுகிறது: நிதின் கட்கரி

முஸ்லிம் சமூகத்தினருக்கு கல்விக்கான அவசரத் தேவை குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். நாக்பூரில் நேற்று (மார்ச். 15) நடைபெற்ற மத்திய இந்தியா கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் மத்திய சால... மேலும் பார்க்க