உதவித்தொகையுடன் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்பயிற்சி!
காஞ்சிபுரம் பச்சையம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மன்னாதர் சுவாமி சமேத ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று(மார்ச் 16) வெகு விமர்சையாக நடைபெற்றது.
கம்பீர சப்த முனீஸ்வரர் திருஉருவ சிலைக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.
கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் சைவ, வைணவ, சமண, பௌத்தம் என பல்வேறு திருக்கோயில்கள் மிகவும் புகழ்பெற்றது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட தேனம்பாக்கம் பகுதியில் ஸ்ரீ மன்னாதர் சுவாமி சமேத ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில் ஆலயம் அமைந்துள்ளது.
சிறிய திருக்கோயிலாக இருந்த இதனை பல லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு மூன்று நிலை ராஜகோபுரம் , மூலவர் விமான கோபுரம், 25 அடி கம்பீர சப்த முனீஸ்வரர்களான சங்கிலிமுனி, செம்முனி, வால்முனி என மூன்று சிலை என அமைக்கப்பட்டு புணரமைப்புப் பணிகள் அனைத்தும் நிறைவேறியது.
இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை(மார்ச் 14) மாலை கணபதி ஹோமத்துடன் மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது.
திருக்கோயில் வாளகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பரிகார தெய்வங்களுக்காக 20 யாகசாலைகளும், மூலவர் பச்சையம்மனுக்காக யாகசாலை என 21 யாகசாலை அமைக்கப்பட்டு, 29 குண்டங்களில் யாகசாலை பூஜை ஸ்ரீமடம் மகேஷ் சிவாச்சாரியார் தலைமையில் 45-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கடந்த இரண்டு நாள்களாக பல்வேறு கால பூஜைகள் நடத்தி இன்று காலை 10 மணிக்கு பூர்ணாகதியை நிறைவு செய்தனர்.
இதையும் படிக்க: புழல் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல்!
இதனைத் தொடர்ந்து மேள தாளம், சிவ வாத்தியங்கள் என முழங்க திருக்கோயிலினை வலம் வந்த கலசங்கள், ராஜ கோபுரம், மூலவர் கோபுரம் , பரிவார தெய்வங்கள், சப்த முனீஸ்வரர்கள் என அனைவருக்கும் ஒரே நேரத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மூலவர் பச்சையம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரத்தில் தீபாரதனையுடன் பக்தர்கள் கண்டு இறை அருள் பெற்றனர்.
இந்த கும்பாபிஷேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றும், தங்கள் வேண்டுதலையும் நிறைவேற்றினர்.
விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானங்களும் வழங்கப்பட்டது.