செய்திகள் :

காஞ்சிபுரம் பச்சையம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

post image

காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மன்னாதர் சுவாமி சமேத ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று(மார்ச் 16) வெகு விமர்சையாக நடைபெற்றது.

கம்பீர சப்த முனீஸ்வரர் திருஉருவ சிலைக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.

கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் சைவ, வைணவ, சமண, பௌத்தம் என பல்வேறு திருக்கோயில்கள் மிகவும் புகழ்பெற்றது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட தேனம்பாக்கம் பகுதியில் ஸ்ரீ மன்னாதர் சுவாமி சமேத ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில் ஆலயம் அமைந்துள்ளது.

சிறிய திருக்கோயிலாக இருந்த இதனை பல லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு மூன்று நிலை ராஜகோபுரம் , மூலவர் விமான கோபுரம், 25 அடி கம்பீர சப்த முனீஸ்வரர்களான சங்கிலிமுனி, செம்முனி, வால்முனி என மூன்று சிலை என அமைக்கப்பட்டு புணரமைப்புப் பணிகள் அனைத்தும் நிறைவேறியது.

இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை(மார்ச் 14) மாலை கணபதி ஹோமத்துடன் மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது.

திருக்கோயில் வாளகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பரிகார தெய்வங்களுக்காக 20 யாகசாலைகளும், மூலவர் பச்சையம்மனுக்காக யாகசாலை என 21 யாகசாலை அமைக்கப்பட்டு, 29 குண்டங்களில் யாகசாலை பூஜை ஸ்ரீமடம் மகேஷ் சிவாச்சாரியார் தலைமையில் 45-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கடந்த இரண்டு நாள்களாக பல்வேறு கால பூஜைகள் நடத்தி இன்று காலை 10 மணிக்கு பூர்ணாகதியை நிறைவு செய்தனர்.

இதையும் படிக்க: புழல் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல்!

இதனைத் தொடர்ந்து மேள தாளம், சிவ வாத்தியங்கள் என முழங்க திருக்கோயிலினை வலம் வந்த கலசங்கள், ராஜ கோபுரம், மூலவர் கோபுரம் , பரிவார தெய்வங்கள், சப்த முனீஸ்வரர்கள் என அனைவருக்கும் ஒரே நேரத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மூலவர் பச்சையம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரத்தில் தீபாரதனையுடன் பக்தர்கள் கண்டு இறை அருள் பெற்றனர்.

இந்த கும்பாபிஷேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றும், தங்கள் வேண்டுதலையும் நிறைவேற்றினர்.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானங்களும் வழங்கப்பட்டது.

நடிகை பிந்து கோஷ் காலமானார்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வலம் வந்த நடிகை பிந்து கோஷ் இன்று (மார்ச் 16) காலமானார். அவருக்கு வயது 78.1980களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நக... மேலும் பார்க்க

'ரூ' என்பது பெரிதானது ஏன்? முதல்வர் விளக்கம்!

தமிழ்நாடு பட்ஜெட்டில் எல்லாத் திட்டங்களும் எனக்கு நெருக்கமானவைதான் என்றாலும்; சில திட்டங்களை உருவாக்கியது எப்படி என்று பகிர்ந்துகொள்கிறேன்! மேலும் பார்க்க

அண்டை மாநிலத்தில் தேர்வு மையம் - ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம்

ரயில்வே தேர்வு எழுதும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் ரயில்வே தேர்வு வாரியம் விளக்கமளித்துள்ளது.அதில், ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணிக்கான இரண்டாம... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிலேயே தேர்வர்களுக்கான மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்- இபிஎஸ்

தமிழ்நாட்டிலேயே தேர்வர்களுக்கான மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தெற்கு ரயில்வேயில் உதவி லோகோபைலட் ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் மீண்டும் தொடங்கிய மழை! மகிழ்ச்சியில் மக்கள்!

தமிழகம் மற்றும் புதுவையில் இன்றுமுதல்(மார்ச் 16) அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவ... மேலும் பார்க்க

வில்வித்தை பயிற்சியாளருக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி

வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துணை முதல்வர் உ... மேலும் பார்க்க