செய்திகள் :

காஞ்சிபுரம் பச்சையம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

post image

காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மன்னாதர் சுவாமி சமேத ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று(மார்ச் 16) வெகு விமர்சையாக நடைபெற்றது.

கம்பீர சப்த முனீஸ்வரர் திருஉருவ சிலைக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.

கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் சைவ, வைணவ, சமண, பௌத்தம் என பல்வேறு திருக்கோயில்கள் மிகவும் புகழ்பெற்றது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட தேனம்பாக்கம் பகுதியில் ஸ்ரீ மன்னாதர் சுவாமி சமேத ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில் ஆலயம் அமைந்துள்ளது.

சிறிய திருக்கோயிலாக இருந்த இதனை பல லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு மூன்று நிலை ராஜகோபுரம் , மூலவர் விமான கோபுரம், 25 அடி கம்பீர சப்த முனீஸ்வரர்களான சங்கிலிமுனி, செம்முனி, வால்முனி என மூன்று சிலை என அமைக்கப்பட்டு புணரமைப்புப் பணிகள் அனைத்தும் நிறைவேறியது.

இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை(மார்ச் 14) மாலை கணபதி ஹோமத்துடன் மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது.

திருக்கோயில் வாளகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பரிகார தெய்வங்களுக்காக 20 யாகசாலைகளும், மூலவர் பச்சையம்மனுக்காக யாகசாலை என 21 யாகசாலை அமைக்கப்பட்டு, 29 குண்டங்களில் யாகசாலை பூஜை ஸ்ரீமடம் மகேஷ் சிவாச்சாரியார் தலைமையில் 45-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கடந்த இரண்டு நாள்களாக பல்வேறு கால பூஜைகள் நடத்தி இன்று காலை 10 மணிக்கு பூர்ணாகதியை நிறைவு செய்தனர்.

இதையும் படிக்க: புழல் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல்!

இதனைத் தொடர்ந்து மேள தாளம், சிவ வாத்தியங்கள் என முழங்க திருக்கோயிலினை வலம் வந்த கலசங்கள், ராஜ கோபுரம், மூலவர் கோபுரம் , பரிவார தெய்வங்கள், சப்த முனீஸ்வரர்கள் என அனைவருக்கும் ஒரே நேரத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மூலவர் பச்சையம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரத்தில் தீபாரதனையுடன் பக்தர்கள் கண்டு இறை அருள் பெற்றனர்.

இந்த கும்பாபிஷேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றும், தங்கள் வேண்டுதலையும் நிறைவேற்றினர்.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானங்களும் வழங்கப்பட்டது.

நில ஆவணங்களை ஒருங்கிணைக்கும் "அக்ரி ஸ்டேக்'!

பிரதமரின் கௌரவ நிதி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற, "அக்ரி ஸ்டேக்' வலைதளத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் நில ஆவணங்கள் அனைத்தையும் இந்த வல... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் இன்று தொடக்கம்!

நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் சட்டப் பேரவையில் திங்கள்கிழமை (மாா்ச் 17) தொடங்குகிறது. வரும் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான பிரத்யேக நிதிநிலை... மேலும் பார்க்க

பாசன நீா் பரப்புகளில் தூா்வாரும் பணி: விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு!

தமிழகத்தில் பாசன நீா் பரப்புகளில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொறியாளா்களுக்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உத்தரவிட்டாா். அந்தத் துறையின் செயல்பாடுகள் குறி... மேலும் பார்க்க

மொழிக் கொள்கை உறுதியைக் காட்டவே ‘ரூ’! -முதல்வா் விளக்கம்

மொழிக் கொள்கையில் நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தவே நிதிநிலை அறிக்கை இலச்சினையில் ‘ரூ’ என பயன்படுத்தினோம் என்று முதல்வா் தெரிவித்தாா். மத்திய நிதியமைச்சா் இதனை பிரச்னையாக எழுப்பியதால், இந்திய அளவில் த... மேலும் பார்க்க

சுய உதவிக் குழு மகளிா் 54 லட்சம் பேருக்கு அடையாள அட்டை: மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் மகளிா் சுய உதவிக் குழுக்களில் இடம்பெற்றுள்ள 54 லட்சம் மகளிருக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக விவரங்களை சேகரிக்கும் பணியை ஒரு மாதத்துக்குள் முடிக்க மாவட்ட... மேலும் பார்க்க

கட்டுப்பாட்டுக்குள் டெங்கு காய்ச்சல்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை சைதாப்பேட்டையி... மேலும் பார்க்க