செய்திகள் :

சம்பல் மசூதியில் வெள்ளையடிக்கும் பணி தொடக்கம்

post image

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சம்பல் மசூதியில் வெள்ளையடிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

மார்ச் 12 ஆம் தேதி, அலகாபாத் உயர் நீதிமன்றம், மசூதியின் வெள்ளையடிக்கும் பணியை ஒரு வாரத்திற்குள் முடித்து முடிக்குமாறு இந்திய தொல்லியல் துறைக்கு (ASI) உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மார்ச் 13 ஆம் தேதி இந்திய தொல்லியல் துறை குழு மசூதியில் ஆய்வு மேற்கொண்டது.

இந்த நிலையில் சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதியின் வெளிப்புற சுவரின் வெள்ளையடிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது என்று சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் மசூதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷகீல் பிடிஐயிடம் தெரிவித்தார்.

சம்பல் பகுதியில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரிய மிக்க ஹரிஹர கோயில் இருந்ததாகவும், முகலாய மன்னா் பாபா் கோயிலின் ஒரு பகுதியை இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

எம்புரான் படத்திலிருந்து விலகிய லைகா?

இதுதொடா்பான வழக்கில் சம்பல் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஜாமா மசூதியில் கடந்த ஆண்டு நவ. 24-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்தது.

அப்போது துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். இதையடுத்து, சம்பல் வன்முறையில் ஈடுபட்டதாக பலா் கைது செய்யப்பட்டனா். இந்த நிலையில், ரமலான் மாதத்தை முன்னிட்டு மசூதியை சுத்தம் செய்யவும் வெள்ளையடிக்கவும் மசூதி நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

வாழ்க்கையின் நோக்கத்தை அறிய உதவியது ஆர்.எஸ்.எஸ்: மோடி

வாழ்க்கையின் நோக்கத்தை அறிய ஆர்.எஸ்.எஸ். தனக்கு உதவியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். செய்யறிவு தொழில்நுட்ப ஆய்வாளர் லெக்ஸ் ஃபிரிட்மேன் உடனான நேர்காணலின்போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏஐ குறித்த... மேலும் பார்க்க

கேதர்நாத் யாத்திரை: ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்குத் தடை விதிக்க பாஜக கோரிக்கை!

கேதர்நாத் யாத்திரை செல்பவர்களில் ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு தடை விதிக்க பாஜக கோரிக்கை வைத்துள்ளது. கேதார்நாத் யாத்திரை தொடர்பான மேலாண்மை கூட்டம் இன்று நடைபெற்றது. கேதர்நாத் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக... மேலும் பார்க்க

மீரட்டில் பல்கலை.யின் திறந்தவெளியில் தொழுகை நடத்தியதாக மாணவர் கைது

மீரட்டில் உள்ள பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி வளாகத்தில் தொழுகை நடத்தியதாக மாணவர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் ஹோலி கொண்டாட்டங்களையொட்டி தனியார் பல்கலைக்கழக வளாகத்தில... மேலும் பார்க்க

லல்லு பிரசாத்தின் மகனுக்கு ரூ.4,000 அபராதம் விதிப்பு

லல்லு பிரசாத் யாதவின் மகனுக்கு பிகார் போக்குவரத்து காவல்துறை ரூ.4,000 அபராதம் விதித்துள்ளது. லல்லு பிரசாத் யாதவின் மூத்த மகனும் முன்னாள் சுகாதார அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் சனிக்கிழமை பாட்னாவில் உள... மேலும் பார்க்க

ரூ. 375 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய வெளிநாட்டுப் பெண்கள் கைது!

கர்நாடக காவல்துறை வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில், இரு பெண்களைக் கைது செய்த மங்களூர் நகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தில... மேலும் பார்க்க

ஆந்திரம்: மதுபோதையில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட நபரால் பரபரப்பு!

ஆந்திரத்தில் மதுபோதையில் அரசுப் பேருந்திற்கு கீழ் உள்ள ஸ்டெப்னி டயரில் பயணி ஒருவர் தொங்கியபடி பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியிலிருந்து சத்ய சாய் மாவட்டத்தில் ... மேலும் பார்க்க