செய்திகள் :

Kalpana: ``நான் உயிரோட இருக்கக் காரணம் என் கணவர்தான்.... வதந்திகளைப் பரப்பாதீர்கள்'' - பாடகி கல்பனா

post image

பிரபல பின்னணிப் பாடகி கல்பனா ராகவேந்தர், ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியாகின. வீட்டில் சுயநினைவின்றி கிடந்த அவரை, அருகில் வீட்டில் குடியிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தாகவும், அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையில் குடும்பப் பிரச்னை என இந்தச் சம்பவத்தைச் சுற்றிலும் வதந்திகள் பலவும் பரவத் தொடங்கின.

இதையெல்லாம் மறுத்த கல்பனாவின் மகள், "என் அம்மா ஒரு பாடகி. அவர் பி.எச்.டியும், எல்.எல்.டியும் படித்து வருகிறார். இதனால் அவருக்கு தூக்கமின்மை ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய, டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்து வருகிறார். இந்த மருந்துகள் ஓவர்டோஸ் ஆகியுள்ளது. அவ்வளவு தான். வதந்திகளை பரப்பாதீர்கள்." என்று விளக்கமளித்திருந்தார்.

பாடகி கல்பனா

இந்நிலையில் சிகிச்சைப் பெற்று நலமாகியிருக்கும் கல்பனா, தனக்கு நடந்தது குறித்து வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், "என்னைப்பற்றியும் என் கணவரை பற்றியும் சோசியல் மீடியால ஒரு தவறான வதந்தி பரவி வருகிறது. அதுபற்றி விளக்கம் கொடுப்பதற்காக தான் இந்த பதிவை நான் போட்டு இருக்கேன். நான், இந்த வயசுல பிஎச்டி, எல்எல்பி என நிறைய விஷயங்களை பண்ணிக்கிட்டு இருக்கேன், அதுமட்டுமில்லாமல், என்னுடைய இசை துறையின் மீதும் நான் ரொம்ப நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

இதனால எனக்கு நிறைய மன அழுத்தங்கள் இதனால கடந்த சில ஆண்டுகளாகவே நான் சரியா தூங்கல. தூங்க முடியாதா பிரச்னையால் நான் அவதிப்பட்ட போது , நான் டாக்டரிடம் சென்றேன். அவர், இது இன்ஃபோமேனியா என்று அதற்கு, டாக்டர்கள் சில மருந்துகளை எனக்கு கொடுத்திருந்தார். அந்த மெடிசன்னோட அளவு கொஞ்சம் அதிகமாகி விட்டது. நான் தூங்க எட்டு மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். ஆனால் அது உதவவில்லை. இதனால் நான் மேலும் 10 மாத்திரைகளை உட்கொண்டதால் அது என்னுடைய நுரையீரலை பாதித்து விட்டதால், நான் சுயநினைவை இழந்து விட்டேன்.

கல்பனா

ஆனால், நான் இன்னைக்கு உயிரோட திரும்பி வந்து அனைவரிடம் பேசுகிறேன் என்றால், அதற்கு காரணம் என் கணவர் எனக்காக பட்ட பாடு தான். என்னை காப்பாற்றுவதற்காக அவர் பட்ட கஷ்டம் சொல்லவே முடியாது. அதுமட்டுமல்லாமல், மீடியா, போலீஸ் என அனைவரும் கஷ்டப்பட்டு என்ன காப்பாத்தினாங்க இதனால நான் உயிர் தப்பிச்சேன். தயவு செய்து எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். என்னோட வாழ்க்கையில், எனக்கும் என் கணவருக்கோ எந்தவிதமான கருத்து வேறுபாடு இல்லை, எனக்கு ரொம்ப நல்ல கணவர் கிடைச்சிருக்காரு, அழகான நல்ல மகளும் கிடைச்சிருக்காங்க இவங்க என் வாழ்க்கையில எனக்கு கிடைச்சதுக்கு கடவுளுக்கு நான் ரொம்ப நன்றி கடன் பட்டு இருக்கேன், தயவுசெய்து என்னை குறித்தும், என் கணவர் குறித்தும் தவறான வதந்திகளை பரப்பாதீர்கள்." என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Game Changer: `எங்களுடைய உழைப்புக்கு சம்பளம் கொடுக்கல' - காவல் நிலையத்தில் புகாரளித்த நடிகர்கள்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் கடந்த மாதம் `கேம் சேஞ்சர்' திரைப்படம் வெளியாகியிருந்தது.தில் ராஜு தயாரித்திருந்த இத்திரைப்படத்திற்கு தற்போது ஒரு சிக்கல் வந்திருக்கிறது. இப்படத்தின் கா... மேலும் பார்க்க

Pushpa 2: "புஷ்பா படத்தைப் பார்த்து மாணவர்கள் கெட்டுப்போறாங்க" - தெலுங்கானா ஆசிரியர் சொல்வது என்ன?

'புஷ்பா-2' படத்தைப் பார்த்து மாணவர்கள் கெட்டுப் போய்விட்டதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.கடந்த 2021 ஆம் ஆண்டு, சுகுமார் இயக்கத்... மேலும் பார்க்க

புஷ்பா திரைப்பட நடிகருக்கு திருமணம்: நீண்ட காலக் காதல் கைக் கூடியது; காதலியை சந்தித்தது எப்படி?

சமீபத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த புஷ்பா 2: தி ரூல் படத்தில் ஜாலி ரெட்டியாக நடித்தவர் டாலி தனஞ்சயா. சமீபத்தில் வெளியான ஜிப்ரா திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெ... மேலும் பார்க்க

porsche Car: `இது தம்பிக்கு அண்ணன் கொடுக்கும் அன்புப் பரிசு...' - தமன் குறித்து பாலய்யா நெகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் அவ்வப்போது எண்ட்ரி கொடுத்தாலும், தெலுங்கு சினிமாவின் உச்சத்தில் வலம் வருபவர் இசையமைப்பாளர் தமன்.பிரபல தெலுங்கு நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணாவின், சமீத்திய திரைப்படங்களான 'Akhanda, Veer... மேலும் பார்க்க

`அப்பாவுக்கு ரஜினி மாதிரி, எனக்கு ப்ரண்ட் இல்லைனு பொறாமைப்பட்டிருக்கேன்' - விஷ்ணு மஞ்சு ஷேரிங்க்ஸ்

தெலுங்கு சினிமாவிலிருந்து மற்றுமொரு பீரியட் திரைப்படம் வெளிவரவிருக்கிறது.அதுதான் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியிருக்கும் `கண்ணப்பா' திரைப்படம். விஷ்ணு மஞ்சு நடிகர் மோகன் பாபுவின் மூத்த மகன். `கண்ணப்ப... மேலும் பார்க்க

''எங்க காதல் சேராதுன்னு நினைச்சேன்; ஆனா, அந்த ஹாஸ்பிடல்ல இருந்தப்போ...'' - நடிகை ஜீவிதா ராஜசேகர்

சொல்லாத காதல் சொர்க்கத்துல சேராதுன்னு சொல்வாங்க. 'இதுதான்டா போலீஸ்' நடிகர் டாக்டர் ராஜசேகரும், அவர் மனைவி நடிகை ஜீவிதாவும் ஒருத்தரையொருத்தர் மனசுக்குள்ள 6 வருஷமா லவ் பண்ண, இனி சேரவே முடியாதுங்கிற ஒரு ... மேலும் பார்க்க