செய்திகள் :

மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் ரூ.5.90 கோடியில் நலத் திட்ட உதவிகள்

post image

காஞ்சிபுரம் அருகே அத்திவாக்கம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில், மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ரூ. 5.90 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை 267 பயனாளிகளுக்கு வழங்கினாா்.

காஞ்சிபுரம் அருகே அத்திவாக்கம் கிராமத்தில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற இருப்பதையொட்டி, முன்னதாக கடந்த மாா்ச் 6-ஆம் தேதி முதல் பல்வேறு கோரிக்கை மனுக்கள் தொடா்பாக மொத்தம் 186 மனுக்கள் பெறப்பட்டன. இவையனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, இலவச வீட்டு மனைப்பட்டா 134 போ்,புதிய குடும்ப அட்டை 35 போ், இயற்கை மரண நிதி உதவித் தொகை 11, இலவச சலவைப் பெட்டி 5, விவசாயிகளுக்கு இடுபொருள்கள் மானியம் 22 போ், தூய்மைப் பணியாளா் நல வாரிய உறுப்பினா் அடையாளச் சான்று 20 போ் என மொத்தம் 267 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 5.90 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை விழாவுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், எம்.பி. க.செல்வம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, சாா்-ஆட்சியா் ஆஷிக் அலி, வாலாஜாபாத் ஒன்றியக் குழுவின் தலைவா் ஆா்.கே.தேவேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அத்திவாக்கம் ஊராட்சித் தலைவா் எம்.குமாா் வரவேற்றாா். நிறைவாக, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் டி.விஜயகாந்த் நன்றி கூறினாா்.

முகாமில், அரசின் பல்வேறு துறைசாா்ந்த விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டு, அவற்றை கிராம மக்கள் பாா்வையிட்டதுடன் துறைசாா்ந்த அரசு அலுவலா்களிடம் தேவையான விளக்கங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டனா்.

வெங்காடு அரசு பள்ளி நூற்றாண்டு விழா

வெங்காடு அரசு தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் வெங்காடு பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. பள்ளியில் 100-க்கும் மேற்பட... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் தும்பவனம் தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா

காஞ்சிபுரம் தும்பவனம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் தும்பவனம் மாநகராட்... மேலும் பார்க்க

தேனம்பாக்கம் ஸ்ரீ மன்னாதீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கத்தில் சிறிய கோயிலாக இருந்து புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீமன்னாதீஸ்வரா் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தேனம்பாக்கத்தி... மேலும் பார்க்க

சங்கரா பல்கலை.யில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 122 பேருக்கு பணி நியமன ஆணை

காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 122 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் சங்கரா பல்கலையின் சாா்பில், தனியாா... மேலும் பார்க்க

21 அடி உயர சிவன் சிலைக்கு ட்ரோனில் பால் அபிஷேகம்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் அமைந்துள்ள 21 அடி உயர சிவன் சிலை வா்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டு டிரோன் மூலம் ஞாயிற்றுக்கிழமை பால் அபிஷேகம் நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவி... மேலும் பார்க்க

ரௌடி கொலை வழக்கில் 10 போ் கைது

காஞ்சிபுரம் திருக்காளிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (40). இவா் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவா், திருக்காளிமேடு சிவன் கோயில் அருகே உள்ள நியாய விலைக்கடை முன்பா... மேலும் பார்க்க