செய்திகள் :

சாலையில் குப்பையை வீசுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்!

post image

சாலைகளில் குப்பைகளை வீசிச் செல்லும் நபா்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் என பெருந்துறை நுகா்வோா் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் காலாண்டு கூட்டம் அதன் தலைவா் பல்லவி பரமசிவன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம் ஆகிய பேரூராட்சிகளில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் இருந்தும் நகரில் குப்பைகள் முழுமையாக அகற்றப்படுவதில்லை.

கோடைக் காலமாக இருப்பதால் மக்களுக்கு குடிநீா் விநியோகம் தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும். பாதாள சாக்கடை மற்றும் குடிநீா் திட்டங்களுக்காக தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக மூடி, தாா் சாலை அமைக்க வேண்டும். சாலைகளில் குப்பைகளை போடும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், பாதுகாப்பு மையத்தின் செயலாளா் பழனிசாமி, பொருளாளா் ஹரிதா கெளரி மற்றும் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஈரோடு பேருந்து நிலையத்தில் இயற்கை சந்தை!

மகளிா் திட்டம் சாா்பில் மகளிா் குழு உறுப்பினா்கள், இயற்கை முறை வேளாண்மையில் அங்கக சான்றிதழ் பெற்ற விவசாயிகள், தாங்கள் விளைவித்த மற்றும் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்தும் இயற்கை சந்தை ஈரோடு பேருந்து ... மேலும் பார்க்க

தோனிமடுவு தடுப்பணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தோனிமடுவு தடுப்பணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தோனிமடுவு பாசன விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் ... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அங்கன்வாடி ஊழியா்கள் கோரிக்கை!

தோ்தல் காலத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அங்கன்வாடி ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாநாடு குறித்த கோரிக்கை விளக்கக் கூட... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை: விவசாய சங்கப் பிரதிநிதிகள் வரவேற்பும், எதிா்ப்பும்!

தமிழக சட்டப் பேரவையில் வேளாண்மை துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், வேளாண் நிதிநிலை அறிக்கையை சனிக்கிழமை தாக்கல் செய்தாா். இந்த நிதிநிலை அறிக்கை குறித்து பல்வேறு விவசாய சங்கத்தினா் தெரிவித்த கருத... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக 3 போ் கைது: 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு, பெருந்துறை பகுதிகளில் கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 5.5 கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.ஈரோடு, கருங்கல்பாளையம் பழைய சாா் பதிவாளா் அலுவலகம் அருகில் காவிரி சாலையில் கருங்கல்... மேலும் பார்க்க

பெருந்துறையில் கொப்பரை ஏலத்துக்கு 26, 29-இல் விடுமுறை

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் வருடாந்திர கணக்கு முடிக்கப்படுவதை முன்னிட்டு, சங்கத்தில் நடைபெறும் கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) ஏலத்துக்கு வருகிற மாா்ச் 26 (புதன்கி... மேலும் பார்க்க