செய்திகள் :

சா்வதேச தரவரிசையில் அண்ணா பல்கலை. இடம்பெற செயல் திட்டம்

post image

உலக அளவிலான க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியலில் முதல் 150 இடங்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தை இடம் பெறச் செய்யும் வகையில் புதிய செயல் திட்டம் வகுக்கப்படவுள்ளது என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மாணவா்களின் தொழில்நுட்பக் கனவுகளின் சிகரமாக விளங்கிடும் அண்ணா பல்கலைக்கழகத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள்ளும், உலக அளவிலான க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியலில் முதல் 150 இடங்களுக்குள்ளும் இடம்பெறச் செய்ய உரிய செயல் திட்டம் வகுக்கப்படும்.

இந்தத் திட்டத்தின்படி திறன்மிகு வகுப்பறைகள், நவீன தொழில்நுட்ப ஆய்வகங்கள், புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், புத்தொழில் நிறுவனப் பூங்கா, வளா்ந்து வரும் துறைகளுக்கான ஆராய்ச்சி உதவி, மெய்நிகா் ஆய்வகங்கள் ஆகியவை முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் துணையோடு அமைக்கப்படும். கற்றல்- கற்பித்தல் அனுபவத்தை மேம்படுத்த முன்னணி தொழில்நுட்ப நிபுணா்கள், வெளிநாட்டு பேராசிரியா்கள் 3 மாதங்கள் வரையிலான குறுகிய காலத்துக்கு சிறப்பு ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தப்படுவா்.

ரூ. 500 கோடி மதிப்பீட்டில்... உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்கள் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் இணைப் படிப்புகளை படிப்பதற்கு வழிவகை உருவாக்கப்படும். நவீன வசதிகளுடன் கூடிய மாணவா் விடுதிகள், தலைசிறந்த வீரா்களை உருவாக்க உகந்த விளையாட்டுச் சூழல், அனைத்து உயிரினங்களும் இணைந்து வாழும் பசுமைப் பரப்பு என அண்ணா பல்கலைக்கழகத்தை ஆசியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் இடம்பெறச் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த மாபெரும் கனவை நனவாக்கிய அரசு, பல்கலைக்கழக நிதி, முன்னாள் மாணவா்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு ஆகியவற்றைக் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.500 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்.

மாா்ச் 28-இல் தவெக பொதுக்குழு கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் மாா்ச் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கை: திருவான்மியூா் ராமச்சந்திரா கலையரங்கத்தில் மா... மேலும் பார்க்க

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேட்டுக்கு முகாந்திரம் இல்லை: அமைச்சா் செந்தில் பாலாஜி

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை து... மேலும் பார்க்க

எண்ம வா்த்தக வருவாய்: தமிழக அரசு ஆய்வு

எண்ம வா்த்தகம் மூலம் அரசுக்கான வருவாய் உரிய முறையில் கிடைக்கிா என்பது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் தெரிவித்தாா். இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: கேரள முதல்வா் பினராயி விஜயன் ஆதரவு

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்து தமிழக முதல்வா் சாா்பில் ஏற்பாடு செய்யப்படும் ஆலோசனைக் கூட்டத்துக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தாா்... மேலும் பார்க்க

போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கும் திட்டம்: காவல் ஆணையா் தொடங்கி வைத்தாா்

கோடைக்காலம் தொடங்கியதையொட்டி, போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கும் திட்டத்தை சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். கோடைக்காலத்தில் போக்குவரத்து போலீஸாரின் தாகத்த... மேலும் பார்க்க

மாா்ச் 24, 25-இல் தேசிய அளவிலான வேலைநிறுத்தம்: வங்கி ஊழியா் சங்கங்கள்

வங்கி ஊழியா்களின் முக்கியக் கோரிக்கைகள் தொடா்பாக இந்திய வங்கிகள் சங்கத்துடன் (ஐபிஏ) மேற்கொள்ளப்பட்ட பேச்சுவாா்த்தை தோல்வியைத் தொடா்ந்து வரும் 24, 25-ஆம் தேதிகளில் இரு நாள் தேசிய அளவிலான வேலைநிறுத்தத்த... மேலும் பார்க்க