செய்திகள் :

சுனிதா வில்லியம்ஸை அழைத்துவர புறப்பட்டது ராக்கெட்!

post image

கடந்த 9 மாதங்களுக்கு மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோரையும் பூமிக்கு அழைத்து வர ஃபால்கான் 9 டிராகன் விண்கலம்.

கடந்த 9 மாதங்களுக்கு மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோரையும் பூமிக்கு அழைத்துவருவதற்காக விண்ணில் செலுத்தப்படவிருந்த ஸ்போஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ராக்கெட்டில், முக்கிய பாகத்தின் செயல்பாடு குறித்து சந்தேகம் எழுந்ததால் அந்தத் திட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

கோளாறு சரிசெய்யப்பட்ட பின் வெள்ளிக்கிழமைக்கு (மாா்ச் 14) பிறகுதான் அந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டாா்லைனா் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மே விண்வெளி நிலையத்தை கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி அடைந்தது.

இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்

பத்து நாள்களுக்குப் பிறகு ஸ்டாா்லைனா் மூலமே அவா்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. இருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவா்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை.

இதன் காரணமாக, அவா்கள் இருவரும் கடந்த 9 மாதங்களாக சா்வதேச விண்வெளி நிலையத்திலேயே சிக்கியுள்ளனா்.

இந்த நிலையில், ஸ்போஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ராக்கெட்டின் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதை அடுத்து சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்துவருவதற்கான ஏற்பாடுகள் நடந்தது.

இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 4.33 மணிக்கு ஃபால்கன் 9 வாயிலாக டிராகன் விண்கலம் செலுத்தப்பட்டது.

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்துவர புறப்பட்ட ஃபால்கான் 9 டிராகன் விண்கலத்தில் அமெரிக்க, ஜப்பான், ரஷியாவைச் சேர்ந்த 4 விஞ்ஞானிகள் புறப்பட்டுள்ளனர்.

வேளாண் நிதிநிலை அறிக்கை - 2025 - 2026: முக்கிய சிறப்பு அறிவிப்புகள்!

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சனிக்கிழமை(மார்ச்.15) தாக்கல் செய்து வருகிறார்.தமிழக அரச... மேலும் பார்க்க

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்!

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்தார். தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நித... மேலும் பார்க்க

வேளாண் பட்ஜெட்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் மரியாதை!

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதையடுத்து, சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான... மேலும் பார்க்க

ரைசினா உரையாடல்: நியூசிலாந்து பிரதமர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்பு!

இந்திய அரசின் அழைப்பை ஏற்று ரைசினா உரையாடல் மாநாட்டில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்ஸர்வர் ரிசர்ச் பவுண்டேஷனுடன் இண... மேலும் பார்க்க

அசாம்: அரசு மகளிர் காப்பகத்தில் ஹோலி கொண்டாடிய ஆளுநர்!

வடகிழக்கு மாநிலமான அசாமின் ஆளுநர் அம்மாநில அரசின் மகளிர் காப்பகத்தில் வசிப்பவர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.குவாஹட்டி மாவட்டத்தின் ஜலுக்பாரி பகுதியிலுள்ள அரசு மகளிர் காப்பகத்தில் வசிப்பவர்கள... மேலும் பார்க்க

இலங்கை: ரயில் மோதி யானைகள் பலியாவதைத் தடுக்க நடவடிக்கை!

இலங்கையில் ரயில் பாதையில் யானைகள் குறுக்கே வந்து பலியாவைத் தடுக்க அந்நாட்டு ரயில்வே துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த பிப்.20 அன்று இலங்கையின் கிழக்கிலுள்ள மட்டக்களப்பிலி... மேலும் பார்க்க