செய்திகள் :

பாசனக் கிணறு, சூரிய சக்தி பம்பு செட், உழவர் சந்தை: வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்

post image

தமிழகத்தில் உள்ள பாசனக் கிணறுகளை சீரமைத்தல், சூரிய சக்தி பம்பு செட் அமைத்துத் தரப்படும், உழவர் சந்தைகளுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

தமிழக வேளாண் பட்ஜெட் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்து ஆற்றி வரும் உரையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதில்,

இ-வாடகை செயலி மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்குவதை வலுப்படுத்து ரூ.17.37 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சிறு,குறு விவசாயிகளின் பயனிற்காக 130 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ரூ.10.50 கோடியில் ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் அதிக வரத்துள்ள 50 உழவர் சந்தைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதற்காக ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் (eNAM) 56 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை ஒருங்கிணைக்க ரூ.39.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

9 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தலா 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்படும்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.50.79 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டு மையங்கள் ரூ.50 கோடியில் அமைக்கப்படும்.

300 கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்க ரூ.1.84 கோடி ஒதுக்கீடு.

திறந்த வெளி பாசன கிணறுகளை புனரமைக்க ரூ.2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்களைப் பயன்படுத்தி, 500 நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தூர் வாருதல் மற்றும் 100 புதிய மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் ரூ.2.75 கோடியில் உருவாக்கப்படும்.

புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கிட, பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றிட 1000 விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும். இதற்கு ரூ.1.50 கோடி ஒதுக்கீடு.

மின்சார இணைப்பு இல்லாத 1000 விவசாயிகளுக்கு தனித்துச் சூரியசக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். இதற்கு ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

காவேரி, வெண்ணாறு, வெள்ளாறு வடிநிலப்பகுதிகளிலும், கல்லணை கால்வாய்ப்பாசனப் பகுதிகளிலும் உள்ள "சி" மற்றும் "டி" பிரிவு வாய்க்கால்களில் 2,925 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகளுக்கு ரூ.13.80 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

டாஸ்மாக் ஊழல்: எந்த நடவடிக்கையும் அமலாக்கத்துறை எடுக்காதது ஏன்? சீமான் கேள்வி

டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் அமலாக்கத்துறை எடுக்காதது ஏன்? என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு ... மேலும் பார்க்க

வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை: வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த அண்ணாமலை

வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை என்று வேளாண் பட்ஜெட்டை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்ட... மேலும் பார்க்க

மின் கம்பத்தில் மோதியதில் தீப்பிடித்த இருசக்கர வாகனம்: 2 வட மாநில இளைஞர்கள் காயம்

சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி இருசக்கர வாகனம் தீப்பிடித்த சம்பவத்தில் இரு வடமாநில இளைஞர்கள் காயமடைந்தனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் இருந்து கலங்கல் செல்லும் சாலையில் கு... மேலும் பார்க்க

அவியல் கூட்டுபோல இருக்கும் வேளாண் பட்ஜெட்! - இபிஎஸ் கடும் விமர்சனம்

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக அரசு வல்லவர்கள் என்பதற்கு இந்த வேளாண் பட்ஜெட் ஒரு சான்றாக அமைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.2025 - 2026 ஆம் நிதியாண்டுக்... மேலும் பார்க்க

த.வெ.க. நெல்லை மாவட்டச் செயலர் சஜி மாரடைப்பால் மரணம்! மருத்துவர்கள் எச்சரித்தும்..

மருத்துவர்கள் எச்சரித்தும், தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டுவந்த த.வெ.க. திருநெல்வேலி மாவட்ட செயலாளர் மாரடைப்பால் மரணமடைந்தார்.தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளரும் தூத்துக... மேலும் பார்க்க

'அவரைக் கேளுங்க சார்!' - செங்கோட்டையன் குறித்து இபிஎஸ் பதில்!

அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று செங்கோட்டையனிடமே கேளுங்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவ... மேலும் பார்க்க