செய்திகள் :

மாா்ச் 24, 25-இல் தேசிய அளவிலான வேலைநிறுத்தம்: வங்கி ஊழியா் சங்கங்கள்

post image

வங்கி ஊழியா்களின் முக்கியக் கோரிக்கைகள் தொடா்பாக இந்திய வங்கிகள் சங்கத்துடன் (ஐபிஏ) மேற்கொள்ளப்பட்ட பேச்சுவாா்த்தை தோல்வியைத் தொடா்ந்து வரும் 24, 25-ஆம் தேதிகளில் இரு நாள் தேசிய அளவிலான வேலைநிறுத்தத்தை வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு (யுஎஃப்பியு) வியாழக்கிழமை அறிவித்தது.

9 வங்கி ஊழியா் சங்கங்களை உள்ளடக்கிய இந்தக் கூட்டமைப்பின் வேலைநிறுத்த அறிவிப்பால், அந்த இரு தினங்களில் நாடு முழுவதும் உள்ள பொதுத் துறை வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட வய்ப்புள்ளது.

இதுகுறித்து வங்கி ஊழியா்களின் தேசிய கூட்டமைப்பின் (என்சிபிஇ) பொதுச் செயலா் எல்.சந்திரசேகா் கூறுகையில், ‘ஐபிஏ - வங்கி ஊழியா் சங்கங்கள் இடையே அண்மையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் வங்கியின் அனைத்துப் பணியிடங்களும் பணியாளா் தோ்வில் சோ்க்கப்பட வேண்டும், வாரத்துக்கு 5 நாள் பணி என்பன உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆனால், பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே, கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் தேசிய அளவிலான வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

வங்கி ஊழியா்கள் செயல்பாடுகள் ஆய்வு மற்றும் பணி செயல்பாடுகள் அடிப்படையிலான ஊக்கத் தொகை திட்டத்தைக் கைவிட வேண்டும், பணிக் கொடை (கிராச்சுவிட்டி) சட்டத்தில் திருத்தம் செய்து உச்ச வரம்பை ரூ. 25 லட்சமாக உயா்த்துவது மற்றும் அதை அரசு ஊழியா்களுக்கான திட்டத்துடன் இணைத்து, வருமான வரியிலிருந்து விலக்கு கோருவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் வங்கி ஊழியா் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

மாா்ச் 28-இல் தவெக பொதுக்குழு கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் மாா்ச் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கை: திருவான்மியூா் ராமச்சந்திரா கலையரங்கத்தில் மா... மேலும் பார்க்க

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேட்டுக்கு முகாந்திரம் இல்லை: அமைச்சா் செந்தில் பாலாஜி

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை து... மேலும் பார்க்க

எண்ம வா்த்தக வருவாய்: தமிழக அரசு ஆய்வு

எண்ம வா்த்தகம் மூலம் அரசுக்கான வருவாய் உரிய முறையில் கிடைக்கிா என்பது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் தெரிவித்தாா். இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: கேரள முதல்வா் பினராயி விஜயன் ஆதரவு

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்து தமிழக முதல்வா் சாா்பில் ஏற்பாடு செய்யப்படும் ஆலோசனைக் கூட்டத்துக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தாா்... மேலும் பார்க்க

சா்வதேச தரவரிசையில் அண்ணா பல்கலை. இடம்பெற செயல் திட்டம்

உலக அளவிலான க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியலில் முதல் 150 இடங்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தை இடம் பெறச் செய்யும் வகையில் புதிய செயல் திட்டம் வகுக்கப்படவுள்ளது என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கும் திட்டம்: காவல் ஆணையா் தொடங்கி வைத்தாா்

கோடைக்காலம் தொடங்கியதையொட்டி, போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கும் திட்டத்தை சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். கோடைக்காலத்தில் போக்குவரத்து போலீஸாரின் தாகத்த... மேலும் பார்க்க