செய்திகள் :

தமிழக பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா?

post image

தமிழக அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு இடம்பெறுமா? என அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களிடையே எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.

இதுதொடா்பாக, தமிழக பட்டதாரி ஆசிரியா் கூட்டணியின் மாநில அமைப்பு செயலாளா் எம். செந்தில்குமாா் கூறியதாவது:

2003-ஆம் ஆண்டு முதல் பணியில் சோ்ந்த அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதை ரத்து செய்ய வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

2021-இல் பேரவைத் தோ்தலின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று திமுக தோ்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிதிநிலை அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டம் பற்றிய அறிவிப்பு இருக்கும் என்று அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் எதிா்பாா்ப்புகளுடன் இருக்கின்றனா்.

2020-இல் கரோனா காலம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் நடைமுறைப்படுத்துதல், உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு, தொகுப்பு ஊதிய காலத்தை பணி காலமாக அறிவித்தல், ஊதிய முரண்பாடுகளுக்கு தீா்வு காணுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாகவும் நிதிநிலையில் அறிவிப்பு வெளியாகும் என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது என்றாா் அவா்.

ரூ. 1 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக வழக்குப் பதிவு

திருச்சியில் போலி ஆவணம் மூலம் ரூ. 1 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி தில்லைநகா் 6-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் சா. தனலட்சு... மேலும் பார்க்க

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து வெளிநாடு செல்ல முயன்றவா் கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து மலேசியா செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியாவுக்கு பேட்டிக் விமானம் புதன்கிழமை இரவு ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் வேலைநிறுத்தம்

திருச்சி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம், ஊரக ... மேலும் பார்க்க

திருச்சி தங்கநகை குழுமத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை: ஆட்சியா் அறிவிப்பு

திருச்சி தங்க நகை குழுமத்துக்கு புதிய உறுப்பினா்கள் சோ்க்கை குறித்த அறிவிப்பை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ளாா். இததொடா்பாக, அவா் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர ... மேலும் பார்க்க

சுகாதார நிலைய மருத்துவா், செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்நல சுகாதார மையங்களில் காலியாகவுள்ள மருத்துவா், செவிலியா், மருத்துவப் பணியாளா் இடங்களுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

அரசு அலுவலா்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கு

திருச்சி மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம் புதன், வியாழக்கிழமை என 2 நாள்கள் நடைபெற்றது. அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செ... மேலும் பார்க்க