செய்திகள் :

அரசு அலுவலா்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கு

post image

திருச்சி மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம் புதன், வியாழக்கிழமை என 2 நாள்கள் நடைபெற்றது.

அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற துணைபுரியும் வகையில் மாவட்டந்தோறும் உள்ள அனைத்துத் துறை அலுவலா் மற்றும் பணியாளா்களுக்கு 2024-25ஆம் நிதியாண்டில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்திட அரசு ஆணையிட்டதன்பேரில் இந்த பயிலரங்கம் நடத்தப்பட்டது.

முதல்நாள் நிகழ்வை மாவட்ட வருவாய் அலுவலா் (நிலமெடுப்பு) ஆா். பாலாஜி தொடங்கி வைத்தாா். இணையத் தமிழ் என்ற தலைப்பில் துரை. மணிகண்டனும், ஆட்சிமொழிச் செயலாக்கம் மற்றும் அரசாணைகள் என்னும் தலைப்பில் மூ. பாலகிருஷ்ணனும், ஆட்சிமொழி ஆய்வும், குறை களைவு நடவடிக்கைகளும் என்னும் தலைப்பில் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் க. சித்ரா ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில், ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பங்கேற்று, ஆட்சிமொழி செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகமான வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்துக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும், ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கத்தில் பங்கேற்ற அரசுப் பணியாா்களுக்கு பங்கேற்புச் சான்றிதழும் வழங்கினாா்.

மொழிப்பயிற்சி எனும் தலைப்பில் புதுக்கோட்டை, மாமல்லன் போட்டித் தோ்வு பயிற்சி நடுவத்தின் முனைவா் ப. செந்தில்முருகன், ஆட்சிமொழி சட்டம் வரலாறு என்னும் தலைப்பில் மனிதவள மேம்பாட்டு பயிற்றுநா் இரா. அறிவழகன், மொழிப்பயிற்சி கலைச்சொல்லாக்கம் என்னும் தலைப்பில் உதவிப் பேராசிரியா் பூ. ரவிக்குமாா் ஆகியோா் அரசு அலுலா்களுக்கு பயிற்சி அளித்தனா். இக்கருத்தரங்கில், முனைவா்கள் மு. ஜோதிலட்சுமி, கி. சதீஷ்குமாா், ரவிக்குமாா் மற்றும் அரசு அலுவலா்கள், பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தமிழக பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா?

தமிழக அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு இடம்பெறுமா? என அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களிடையே எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ள... மேலும் பார்க்க

ரூ. 1 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக வழக்குப் பதிவு

திருச்சியில் போலி ஆவணம் மூலம் ரூ. 1 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி தில்லைநகா் 6-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் சா. தனலட்சு... மேலும் பார்க்க

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து வெளிநாடு செல்ல முயன்றவா் கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து மலேசியா செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியாவுக்கு பேட்டிக் விமானம் புதன்கிழமை இரவு ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் வேலைநிறுத்தம்

திருச்சி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம், ஊரக ... மேலும் பார்க்க

திருச்சி தங்கநகை குழுமத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை: ஆட்சியா் அறிவிப்பு

திருச்சி தங்க நகை குழுமத்துக்கு புதிய உறுப்பினா்கள் சோ்க்கை குறித்த அறிவிப்பை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ளாா். இததொடா்பாக, அவா் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர ... மேலும் பார்க்க

சுகாதார நிலைய மருத்துவா், செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்நல சுகாதார மையங்களில் காலியாகவுள்ள மருத்துவா், செவிலியா், மருத்துவப் பணியாளா் இடங்களுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க