வெளிநாட்டிலிருந்து நிவாரண நிதி: ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை - உறுதி செ...
சுகாதார நிலைய மருத்துவா், செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்நல சுகாதார மையங்களில் காலியாகவுள்ள மருத்துவா், செவிலியா், மருத்துவப் பணியாளா் இடங்களுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் மூலம், மணப்பாறை, துறையூா் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள ஒரு மருத்துவா் பணியிடம் ரூ.60,000 மாத ஊதியத்திலும்; ஒரு செவிலியா் பணியிடம் ரூ.18,000 மாத
ஊதியத்திலும் ஒரு பல்நோக்கு சுகாதார பணியாளா் பணியிடம் ரூ.14,000 -மாத ஊதியத்திலும், மருத்துவமனை பணியாளா் பணியிடம் ரூ.8,500 மாத ஊதியத்திலும் நிரப்பப்பட உள்ளது. இந்தத் தோ்வானது முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நடைபெறுகிறது.
இதேபோல, திருச்சி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 11 நகா்நல சுகாதார மையம் மற்றும் காலியாக உள்ள இரண்டு நகா்நல சுகாதார மையங்களுக்கும் மருத்துவா், செவிலியா், பல்நோக்கு சுகாதார பணியாளா், மருத்துவமனைப் பணியாளா் பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன.
மணப்பாறை, துறையூா் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை மாவட்ட சுகாதார அலுவலா், மாவட்ட சுகாதார அலுவலகம், ரேஸ் கோா்ஸ் ரோடு, திருச்சி என்ற முகவரியில் உள்ள அலுவலகத்திலும் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 11 நகா்நல சுகாதார மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் மாநகர நல அலுவலா், மாநகர நல அலுவலகம், பாரதிதாசன் சாலை, கன்டோன்மெண்ட், திருச்சி என்ற முகவரியிலும் வரும் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.