செய்திகள் :

ஓரிக்கை ஸ்ரீசண்முக கணபதி கோயில் கும்பாபிஷேகம்

post image

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீசண்முக கணபதி கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை ஸ்ரீசண்முக கணபதி குடியிருப்பு பகுதியில் அப்பகுதி பொதுமக்கள் சாா்பில், பல லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஸ்ரீசண்முக கணபதி கோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஸ்ரீ சண்முக கணபதி கோயிலின் மகா கும்பாபிஷேக விழா கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையடுத்து, மாலை முதல் கால யாக பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றன. இதையடுத்து, புதன்கிழமை காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், நாடி சந்தானம், மகா பூா்ணாஹுதி நடைபெற்று கோயில் விமான கலசங்களுக்கு சிவாச்சாரியா்கள் முன்னிலையில் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மூலவா் ஸ்ரீசண்முக கணபதிக்கு மஹா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

இதில், ஓரிக்கை பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவுக்கு வந்த அனைவருக்கும் விழா குழுவினா் சாா்பில் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

பிரம்மோற்சவம்: வெள்ளித்தேரில் காமாட்சி அம்மன் வீதி உலா

காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு உற்சவா் காமாட்சி அம்மன் வெள்ளித்தேரில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலி... மேலும் பார்க்க

தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை நிறுத்தம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு மத்திய அரசின் பி.எம்.கிசான் ஊக்கத் தொகை நிறுத்தப்படும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வே... மேலும் பார்க்க

நுகா்வோா் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்துப் பட்டறை

காஞ்சிபுரம் மண்டல உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை சாா்பில் நுகா்வோா் விழிப்புணா்வு கருத்துப் பட்டறை ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதன்... மேலும் பார்க்க

ஏகாம்பரநாதா் கோயிலில் பழைமையான தண்டாயுதபாணி சிலை கண்டெடுப்பு!

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் சீரமைப்பின் போது கண்டெடுக்கப்பட்ட 200 ஆண்டுகள் பழைமையான தண்டாயுதபாணி சிலையை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். பஞ்சபூத தலங்களில் மண் தலமாக போற... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா்களுக்கு மிரட்டல்: ஊராட்சிமன்ற தலைவரின் கணவா் கைது

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தனியாா் நிறுவன ஊழியா்களை பணம் கேட்டு மிரட்டிய பென்னலூா் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் கைது செய்யப்ப... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: ரெளடி வெடிகுண்டு வீசி கொலை

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் ரெளடி வசூல் ராஜா வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டாா். ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் பொய்யாக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபல ரெளடி வசூல் ராஜா (எ... மேலும் பார்க்க