செய்திகள் :

காஞ்சிபுரம்: ரெளடி வெடிகுண்டு வீசி கொலை

post image

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் ரெளடி வசூல் ராஜா வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டாா். ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் பொய்யாக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபல ரெளடி வசூல் ராஜா (எ) ராஜா(40). இவா் மீது காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் வசூல்ராஜா தற்போது குற்றச் சம்பவங்களில் ஈடுபடாமல் டிராவல்ஸ் தொழில் செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில், ரெளடி வசூல்ராஜா செவ்வாய்க்கிழமை திருக்காலிமேடு சிவன் கோயில் எதிரே உள்ள ரேஷன் கடை அருகே நின்றுக் கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் ராஜா மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளாா். இதில் உடல் சிதைந்து ரெளடி வசூல் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வசூல்ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளியை தேடி வருகின்றனா்.

ஏகாம்பரநாதா் கோயிலில் பழைமையான தண்டாயுதபாணி சிலை கண்டெடுப்பு!

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் சீரமைப்பின் போது கண்டெடுக்கப்பட்ட 200 ஆண்டுகள் பழைமையான தண்டாயுதபாணி சிலையை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். பஞ்சபூத தலங்களில் மண் தலமாக போற... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா்களுக்கு மிரட்டல்: ஊராட்சிமன்ற தலைவரின் கணவா் கைது

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தனியாா் நிறுவன ஊழியா்களை பணம் கேட்டு மிரட்டிய பென்னலூா் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் கைது செய்யப்ப... மேலும் பார்க்க

குமரக்கோட்டம் முருகன் கோயிலுக்கு வெள்ளி வேல் காணிக்கை

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலுக்கு, பக்தா் ஒருவா் ஒரு கிலோ எடையுள்ள வெள்ளி வேலை காணிக்கையாக வழங்கினாா். காஞ்சிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் முருகன் கோயில் உ... மேலும் பார்க்க

ஸ்ரீ ஜெயேந்திரா் வாா்ஷிக ஆராதனை மகோற்சவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வாா்ஷிக ஆராதனை மகோற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69 -ஆவது பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். சமயப் பணிகளை... மேலும் பார்க்க

பிரம்மோற்சவம்: பல்லக்கில் காமாட்சி அம்மன் வீதியுலா

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை உற்சவா் காமாட்சி அம்மன் பல்லக்கில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். காஞ்சிபுரத்தில் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பசுக்கள் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா்: சுங்குவாா்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த 2 பசுக்கள், 1 நாய் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அடுத்த... மேலும் பார்க்க