செய்திகள் :

போலி வருமான வரித் துறை அதிகாரி கைது

post image

பழனி அருகே செங்கல் சூளையில் வருமானவரித் துறை அதிகாரி என போலியாக நடித்து பணம் பறிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள சத்திரப்பட்டியில் செந்தில்குமாா் செங்கல் சூளை நடத்தி வருகிறாா். புதன்கிழமை இங்கு காரில் வந்த சந்திரசேகா், தன்னை வருமான வரித் துறை அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டு அடையாள அட்டையும் காண்பித்தாா்.

மேலும், செங்கல் சூளையில் கிடைக்கும் வருமானத்துக்கு குறைவாக கணக்கு காட்டுவதாக புகாா் வந்ததாகக் கூறி செந்தில்குமாரிடம் பணம் பறிக்க முயன்றாா்.

இதனால் சந்தேகமடைந்த செந்தில்குமாா், சத்திரப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். உடனே, அங்கு வந்த போலீஸாா் சந்திரசேகரிடம் அடையாள அட்டையை பெற்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அவா் மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை சோ்ந்தவா் என்றும், பழனி, பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி பகுதிகளில் வாடகை காரில் வந்து வருமான வரித் துறை அதிகாரி போல நடித்து பணம் பறித்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சந்திரசேகரைக் கைது செய்தனா்.

பழனியில் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா தேரோட்டம்

பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கடந்த ம... மேலும் பார்க்க

கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனை: 10 வியாபாரிகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம்

ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனை செய்த 10 வியாபாரிகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில், ... மேலும் பார்க்க

வத்தலகுண்டு அருகே சுங்கச் சாவடியை சூறையாடிய மக்கள்

வத்தலகுண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சுங்கச் சாவடியை பொதுமக்கள் புதன்கிழமை உடைத்து சேதப்படுத்தினா். திண்டுக்கல்-குமுளி நான்கு வழிச் சாலைத் திட்டம் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தொடா் மழை: கொடைக்கானல் பகுதிகளில் மின் தடை

கொடைக்கானல் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், நகா், புகா் பகுதிகளில் புதன்கிழமை மின் தடை ஏற்பட்டது. கொடைக்கானல் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், கொடைக்கானல், அப... மேலும் பார்க்க

பொதுப்பட்டியலில் உள்ள கல்வியில் மாநில அரசுக்கும் உரிமை உண்டு: அமைச்சா் இ.பெரியசாமி

பொதுப் பட்டியலில் உள்ள கல்வியில் மாநில அரசுக்கும் உரிமை உண்டு என்பதால், அதற்கான நிதியை வழங்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். ‘தமிழ்நாடு போராடும்,... மேலும் பார்க்க

பழனியில் கஞ்சா விற்பனை: 7 போ் கைது

பழனி பகுதியில் கஞ்சா விற்றதாக 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்ட போது, பழனி வையாபுரிக்குளம் பாலம் பகுதியில் கஞ்சா விற்ப... மேலும் பார்க்க