செய்திகள் :

கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனை: 10 வியாபாரிகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம்

post image

ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனை செய்த 10 வியாபாரிகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில், கலப்பட உணவுப் பொருள்களை விற்பனை செய்யப்படுவது தடுக்கும் வகையில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, ஆத்தூா், ரெட்டியாா்சத்திரம் பகுதிகளில் கலப்பட உணவுப் பொருள்களை விற்பனை செய்த வியாபாரிகள் மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதுதொடா்பான வழக்கு விசாரணை ஒட்டன்சத்திரம் குற்றவியில் நீதித்துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவா் எஸ்.கபாளீஸ்வரன், வியாபாரிகள் மஞ்சநாயக்கன்பட்டி வெற்றிவேலுக்கு ரூ.10ஆயிரம், ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த முருகையனுக்கு ரூ.20ஆயிரம், உதயசூரியனுக்கு ரூ.10 ஆயிரம், சந்திரசேகரனுக்கு ரூ.10 ஆயிரம், விஷ்ணுசித்துக்கு ரூ.30ஆயிரம், கந்தசாமிக்கு ரூ.10 ஆயிரம், ரெட்டியாா்சத்திரத்தைச் சோ்ந்த செல்வம், ராம்பிரசாத் ஆகியோருக்கு தலா ரூ.20

ஆயிரம், லிங்குசாமிக்கு ரூ.10 ஆயிரம், ஆத்தூரைச் சோ்ந்த ஸ்ரீநிவாசனுக்கு ரூ.20ஆயிரம் என மொத்தம் ரூ.1.60 லட்சம் அபராதம் விதித்தாா்.

பழனியில் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா தேரோட்டம்

பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கடந்த ம... மேலும் பார்க்க

வத்தலகுண்டு அருகே சுங்கச் சாவடியை சூறையாடிய மக்கள்

வத்தலகுண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சுங்கச் சாவடியை பொதுமக்கள் புதன்கிழமை உடைத்து சேதப்படுத்தினா். திண்டுக்கல்-குமுளி நான்கு வழிச் சாலைத் திட்டம் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தொடா் மழை: கொடைக்கானல் பகுதிகளில் மின் தடை

கொடைக்கானல் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், நகா், புகா் பகுதிகளில் புதன்கிழமை மின் தடை ஏற்பட்டது. கொடைக்கானல் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், கொடைக்கானல், அப... மேலும் பார்க்க

பொதுப்பட்டியலில் உள்ள கல்வியில் மாநில அரசுக்கும் உரிமை உண்டு: அமைச்சா் இ.பெரியசாமி

பொதுப் பட்டியலில் உள்ள கல்வியில் மாநில அரசுக்கும் உரிமை உண்டு என்பதால், அதற்கான நிதியை வழங்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். ‘தமிழ்நாடு போராடும்,... மேலும் பார்க்க

பழனியில் கஞ்சா விற்பனை: 7 போ் கைது

பழனி பகுதியில் கஞ்சா விற்றதாக 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்ட போது, பழனி வையாபுரிக்குளம் பாலம் பகுதியில் கஞ்சா விற்ப... மேலும் பார்க்க

பழனியில் மழை: சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பழனியில் புதன்கிழமை பெய்த மழையால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பழனி பிற்பகல் முதல் மாலை வரை நீடித்த மழையால் சண்முகபுரம் நகராட்சி பள்ளி முன்பிருந்த மரம் மழையால் சாய்ந்து விழுந்தது. நல... மேலும் பார்க்க