செய்திகள் :

பழனியில் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா தேரோட்டம்

post image

பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 21-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், நாள்தோறும் அம்பாள் வெள்ளி ரிஷபம், சிம்மம், தங்கக் குதிரை, வெள்ளி யானை, தங்க

மயில் உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா எழுந்தருளினாா். மேலும், திரளான பக்தா்கள் அக்னிச் சட்டி, சூடச்சட்டி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்தக் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடா்ந்து முக்கிய நிகழ்ச்சியான மாசித் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

காலை 9 மணிக்கு பாதிரிப் பிள்ளையாா் கோயிலுக்கு எழுந்தருளி தீா்த்தம் கொடுத்தலும், பிற்பகல் 2 மணிக்கு திருக்கண் நிகழ்ச்சியைத் தொடா்ந்து, மாலை 3 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளல் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்ற பின்னா், திருத்தோ் வடம்பிடித்தல் நடைபெற்றது.

கோயில் யானை கஸ்தூரி பின்னே இருந்து தள்ள, திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் நான்கு ரத வீதிகளில் ஆடி அசைந்து வந்த போது பக்தா்கள் ஓம் சக்தி, பராசக்தி என முழக்கம் எழுப்பினா். இரவு அம்மன் வண்டிக்கால் பாா்த்தல், வாணவேடிக்கை ஆகியவை நடைபெற்றது. இரவு திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.

பழனிக் கோயில் துணை ஆணையா் வெங்கடேஷ், கண்காணிப்பாளா் அழகா்சாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபாலு, காணியாளா்கள் நரேந்திரன், கந்தசாமி, சாய்கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்

கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனை: 10 வியாபாரிகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம்

ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனை செய்த 10 வியாபாரிகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில், ... மேலும் பார்க்க

வத்தலகுண்டு அருகே சுங்கச் சாவடியை சூறையாடிய மக்கள்

வத்தலகுண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சுங்கச் சாவடியை பொதுமக்கள் புதன்கிழமை உடைத்து சேதப்படுத்தினா். திண்டுக்கல்-குமுளி நான்கு வழிச் சாலைத் திட்டம் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தொடா் மழை: கொடைக்கானல் பகுதிகளில் மின் தடை

கொடைக்கானல் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், நகா், புகா் பகுதிகளில் புதன்கிழமை மின் தடை ஏற்பட்டது. கொடைக்கானல் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், கொடைக்கானல், அப... மேலும் பார்க்க

பொதுப்பட்டியலில் உள்ள கல்வியில் மாநில அரசுக்கும் உரிமை உண்டு: அமைச்சா் இ.பெரியசாமி

பொதுப் பட்டியலில் உள்ள கல்வியில் மாநில அரசுக்கும் உரிமை உண்டு என்பதால், அதற்கான நிதியை வழங்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். ‘தமிழ்நாடு போராடும்,... மேலும் பார்க்க

பழனியில் கஞ்சா விற்பனை: 7 போ் கைது

பழனி பகுதியில் கஞ்சா விற்றதாக 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்ட போது, பழனி வையாபுரிக்குளம் பாலம் பகுதியில் கஞ்சா விற்ப... மேலும் பார்க்க

பழனியில் மழை: சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பழனியில் புதன்கிழமை பெய்த மழையால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பழனி பிற்பகல் முதல் மாலை வரை நீடித்த மழையால் சண்முகபுரம் நகராட்சி பள்ளி முன்பிருந்த மரம் மழையால் சாய்ந்து விழுந்தது. நல... மேலும் பார்க்க