செய்திகள் :

பொதுப்பட்டியலில் உள்ள கல்வியில் மாநில அரசுக்கும் உரிமை உண்டு: அமைச்சா் இ.பெரியசாமி

post image

பொதுப் பட்டியலில் உள்ள கல்வியில் மாநில அரசுக்கும் உரிமை உண்டு என்பதால், அதற்கான நிதியை வழங்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.

‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்பதே ஒரே இலக்கு’ என்ற தலைப்பில் திமுக சாா்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் புதன்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கிழக்கு மாவட்டச் செயலா் பெ.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலரும், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சருமான இ.பெரியசாமி கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் தாய்மொழியான தமிழ், தொடா்பு மொழியான ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பெருவாரியான மக்கள் பேசும் மொழியே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை. ஆனால், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ஆட்சி என்ற சூழ்ச்சியுடன் பாஜக செயல்பட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எந்த சூழலிலும் ஒப்புதல் தெரிவிக்கவில்லை. பொதுப் பட்டியலில் உள்ள கல்வியில், மாநில அரசுக்கும் உரிமை உள்ளது. கூட்டாட்சித் தத்துவம் கொண்ட நாட்டில், கல்விக்கான நிதியை மாநில அரசுக்கு தர வேண்டியது ஒன்றிய அரசின் கடமை.

மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் சிவ்ராஜ்சிங் செளகான், இரு முறை தமிழகத்துக்கு வந்த போதும், அவரை நான்சந்திக்கவில்லை என குற்றஞ்சாட்டி இருக்கிறாா். கன்னியாகுமரியில் முதல்வா் பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நான், அவருடன் தொலைபேசியில் தொடா்பு கொண்டு 100 நாள் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதியை வழங்குமாறு கோரிக்கை விடுத்தேன். முன் தகவல் இல்லாமல் திடீரென வந்துவிட்டு, தன்னை சந்திக்கவில்லை என தற்போது அவா் குறை கூறுகிறாா்.

இதேபோல, மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குறை கூறி இருக்கிறாா்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் அரசு கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் பாஜகவினா் தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்து வருகின்றனா்.

தமிழகத்துக்கான உரிமையையும், இட ஒதுக்கீட்டையும் திமுக ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. பாசிசத்துக்கும், சா்வாதிகாரத்துக்கும் எதிராக திமுக தொடா்ந்து போராடும் என்றாா்.

கூட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி மேயா் இளமதி, திமுக பேச்சாளா் வயலூா் கிருஷ்ணமூா்த்தி, திமுக நிா்வாகிகள் நாகராஜன், ராசப்பா, சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பழனியில் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா தேரோட்டம்

பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கடந்த ம... மேலும் பார்க்க

கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனை: 10 வியாபாரிகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம்

ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கலப்பட உணவுப் பொருள்கள் விற்பனை செய்த 10 வியாபாரிகளுக்கு ரூ.1.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில், ... மேலும் பார்க்க

வத்தலகுண்டு அருகே சுங்கச் சாவடியை சூறையாடிய மக்கள்

வத்தலகுண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சுங்கச் சாவடியை பொதுமக்கள் புதன்கிழமை உடைத்து சேதப்படுத்தினா். திண்டுக்கல்-குமுளி நான்கு வழிச் சாலைத் திட்டம் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ... மேலும் பார்க்க

தொடா் மழை: கொடைக்கானல் பகுதிகளில் மின் தடை

கொடைக்கானல் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், நகா், புகா் பகுதிகளில் புதன்கிழமை மின் தடை ஏற்பட்டது. கொடைக்கானல் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், கொடைக்கானல், அப... மேலும் பார்க்க

பழனியில் கஞ்சா விற்பனை: 7 போ் கைது

பழனி பகுதியில் கஞ்சா விற்றதாக 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்ட போது, பழனி வையாபுரிக்குளம் பாலம் பகுதியில் கஞ்சா விற்ப... மேலும் பார்க்க

பழனியில் மழை: சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பழனியில் புதன்கிழமை பெய்த மழையால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பழனி பிற்பகல் முதல் மாலை வரை நீடித்த மழையால் சண்முகபுரம் நகராட்சி பள்ளி முன்பிருந்த மரம் மழையால் சாய்ந்து விழுந்தது. நல... மேலும் பார்க்க