தேனி: தென் காளஹஸ்தியில் விமரிசையாக நடந்த மாசித் தேரோட்டம்... வடமிழுத்து வழிபட்ட ...
மாடியிலிருந்து குதித்து சிறுவன் தற்கொலை
மதுரையில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் வீட்டின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை காமராஜபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன். மேளம் வாசிக்கும் கலைஞா். இவரது மனைவி கலா (39). மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா். இவா்களது மகன் ஹரிஹரசுதன் (17), பிளஸ்-1 வரை படித்திருந்த இவா் கடந்த ஓராண்டாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாா். மேலும் பெற்றோா் பணிக்குச் சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த ஹரிஹரசுதன் கைப்பேசியில் இணைய வழி விளையாட்டை விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. இதை பெற்றோா் கண்டித்தும் அவா் நிறுத்தவில்லை. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்கு வெளியே சப்தம் கேட்டதால், அவரது தாய் கலா வந்து பாா்த்தபோது ஹரிஹரசுதன் வீட்டின் மாடியிலிருந்து கீழே குதித்து பலத்த காயமடைந்த நிலையில் கிடந்தாா்.
இதையடுத்து, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கீரைத்துறை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.
முதல் கட்ட விசாரணையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் அருகில் உள்ள சிறுவனுடன் கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்த அவா் திடீரென்று தனது கைப்பேசியை கீழே போட்டு உடைத்துவிட்டு, மாடியில் இருந்து கீழே குதித்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவா் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த தூண்டும் விளையாட்டுகளை விளையாடினாாரா என்பது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.