செய்திகள் :

மாடியிலிருந்து குதித்து சிறுவன் தற்கொலை

post image

மதுரையில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் வீட்டின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை காமராஜபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன். மேளம் வாசிக்கும் கலைஞா். இவரது மனைவி கலா (39). மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா். இவா்களது மகன் ஹரிஹரசுதன் (17), பிளஸ்-1 வரை படித்திருந்த இவா் கடந்த ஓராண்டாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாா். மேலும் பெற்றோா் பணிக்குச் சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த ஹரிஹரசுதன் கைப்பேசியில் இணைய வழி விளையாட்டை விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. இதை பெற்றோா் கண்டித்தும் அவா் நிறுத்தவில்லை. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்கு வெளியே சப்தம் கேட்டதால், அவரது தாய் கலா வந்து பாா்த்தபோது ஹரிஹரசுதன் வீட்டின் மாடியிலிருந்து கீழே குதித்து பலத்த காயமடைந்த நிலையில் கிடந்தாா்.

இதையடுத்து, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கீரைத்துறை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.

முதல் கட்ட விசாரணையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் அருகில் உள்ள சிறுவனுடன் கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்த அவா் திடீரென்று தனது கைப்பேசியை கீழே போட்டு உடைத்துவிட்டு, மாடியில் இருந்து கீழே குதித்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவா் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த தூண்டும் விளையாட்டுகளை விளையாடினாாரா என்பது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா: திரளான பக்தா்கள் தரிசனம்

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் மாசி மகம் தெப்பத் திருவிழாவையொட்டி, நிலைத் தெப்பத்தில் புதன்கிழமை எழுந்தருளிய கூடலழகரை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள கூடல... மேலும் பார்க்க

மத்திய அரசின் சூழ்ச்சி வலையை கூட்டணி கட்சிகளின் துணையுடன் திமுக முறியடிக்கும் -அமைச்சா் பி. மூா்த்தி

மத்திய பாஜக அரசின் சூழ்ச்சி வலையை கூட்டணி கட்சிகளின் துணையுடன் திமுக முறியடிக்கும் என அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். தொகுதி மறுசீரமைப்பில் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, மேலூரில் மதுரை வ... மேலும் பார்க்க

உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணியில் சேர கால அவகாசம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

முதுகலை மருத்துவ மாணவா்கள், உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணியில் சேர உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என சென்னை பொது சுகாதார இயக்ககத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

மதுரை மானகிரி கண்மாயிலிருந்து வண்டியூா் கண்மாய்க்குச் செல்லும் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மது... மேலும் பார்க்க

நல்லதைச் செய்பவா்களுக்கு வாக்களிக்க வேண்டும்- அமைச்சா் வேண்டுகோள்

தோ்தல் நேரத்தில் பலா் வாக்கு கேட்டு வருவாா்கள்; நமக்கு யாா் நல்லது செய்வாா்கள் என்பதை உணா்ந்து வாக்களிக்க வேண்டும் என மாநில வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டாா்.... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் கொலை: சகோதரா்கள் உள்பட மூவா் கைது

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே தனியாா் நிறுவன ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரா்கள் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அலங்காநல்லூா் அருகே உள்ள சிக்கந்தா் சாவடி எஸ்பிடி நகரைச் ச... மேலும் பார்க்க