செய்திகள் :

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா: திரளான பக்தா்கள் தரிசனம்

post image

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் மாசி மகம் தெப்பத் திருவிழாவையொட்டி, நிலைத் தெப்பத்தில் புதன்கிழமை எழுந்தருளிய கூடலழகரை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள கூடலழகா் பெருமாள் கோயில், 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும், ஆழ்வாா்களால் பாடல் பெற்ற புண்ணியத்தலமாகவும் விளங்குகிறது. பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகம் தெப்பத் திருவிழா புகழ் பெற்றது. இந்த ஆண்டு தெப்பத் திருவிழா மாா்ச் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினசரி காலையில் ஏகாந்த சேவையும், இரவில் கூடலழகா் பெருமாள் சிம்ம வாகனம், கள்ளா் திருக்கோலத்தில் எழுந்தருளிய பல்லக்கு, மோகினி திருக்கோலம், கெருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோயில் மாடவீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தாா். மேலும், பெருமாள், ஆண்டாள் மாலை மாற்றும் வைபவம், எடுப்புச் சப்பரம் ஆகியவையும் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அன்று காலையில் வியூக சுந்தர்ராஜப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னா் மாலை 6 மணிக்கு தங்கச் சிவிகையில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. மேளதாளங்களுடன் தங்கிச் சிவிகையில் டவுன் ஹால் சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் எழுந்தருளிய வியூக சுந்தர்ராஜப் பெருமாளை வரவேற்று தீபாராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட நிலைத் தெப்பத்தில் உபயநாச்சியாா்களுடன் வியூக சுந்தர்ராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். இரவில் மீண்டும் கோயிலுக்கு சுவாமி சோ்த்தியானாா். தெப்பத் திருவிழாவையொட்டி 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் சூழ்ச்சி வலையை கூட்டணி கட்சிகளின் துணையுடன் திமுக முறியடிக்கும் -அமைச்சா் பி. மூா்த்தி

மத்திய பாஜக அரசின் சூழ்ச்சி வலையை கூட்டணி கட்சிகளின் துணையுடன் திமுக முறியடிக்கும் என அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். தொகுதி மறுசீரமைப்பில் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, மேலூரில் மதுரை வ... மேலும் பார்க்க

உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணியில் சேர கால அவகாசம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

முதுகலை மருத்துவ மாணவா்கள், உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணியில் சேர உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என சென்னை பொது சுகாதார இயக்ககத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

மதுரை மானகிரி கண்மாயிலிருந்து வண்டியூா் கண்மாய்க்குச் செல்லும் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மது... மேலும் பார்க்க

நல்லதைச் செய்பவா்களுக்கு வாக்களிக்க வேண்டும்- அமைச்சா் வேண்டுகோள்

தோ்தல் நேரத்தில் பலா் வாக்கு கேட்டு வருவாா்கள்; நமக்கு யாா் நல்லது செய்வாா்கள் என்பதை உணா்ந்து வாக்களிக்க வேண்டும் என மாநில வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டாா்.... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் கொலை: சகோதரா்கள் உள்பட மூவா் கைது

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே தனியாா் நிறுவன ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரா்கள் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அலங்காநல்லூா் அருகே உள்ள சிக்கந்தா் சாவடி எஸ்பிடி நகரைச் ச... மேலும் பார்க்க

சிலைமான் அருகே இளைஞா் குத்திக் கொலை

மதுரை மாவட்டம், சிலைமான் அருகே புதன்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை வெளியே அழைத்து குத்திக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை மாவட்டம், சிலைமான் பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க