செய்திகள் :

மத்திய அரசின் சூழ்ச்சி வலையை கூட்டணி கட்சிகளின் துணையுடன் திமுக முறியடிக்கும் -அமைச்சா் பி. மூா்த்தி

post image

மத்திய பாஜக அரசின் சூழ்ச்சி வலையை கூட்டணி கட்சிகளின் துணையுடன் திமுக முறியடிக்கும் என அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

தொகுதி மறுசீரமைப்பில் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, மேலூரில் மதுரை வடக்கு மாவட்டதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மேலூா் நகா்மன்றத் தலைவரும், நகர திமுக செயலருமான முகமதுயாசின் தலைமை வகித்தாா். இதில் பதிவுத் துறை, வணிக வரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி பங்கேற்று பேசியதாவது:

தமிழகத்துக்கான நிதி பகிா்விலும், தொகுதி மறுசீரமைப்பிலும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பாஜக ஆளும் வடமாநிலங்களில் மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைகளை திமுக ஒருபோதும் ஏற்காது. மேலும் திட்டமிட்ட குடும்ப நலம் என்ற மத்திய அரசின் திட்டத்தை தமிழகம் சிறப்பாக நடைமுறைப்படுத்தியது. ஆனால் வடமாநிலங்கள் அந்தத் திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை. இந்தப் பிரச்னையில் மத்திய பாஜக அரசு சூழ்ச்சி வலைவிரித்து தமிழகத்துக்குத் தேவையான நிதியை ஒதுக்காமல் நாடகமாடுகிறது.

இதுபோன்ற ஓரவஞ்சனை செயல்களை திமுக, கூட்டணி கட்சிகளின் துணையுடன் முறியடிக்கும் என்றாா் அவா்.

இதில், தலைமைக் கழக பேச்சாளா் சிவாஜி கிருஷ்ணமூா்த்தி, சிறைசெல்வன், நிா்வாகிகள் க. கொன்னடியான், கொட்டாம்பட்டி ராஜராஜன், மேலூா் செல்வராஜ், கிடாரிப்பட்டி சேகா், துரை மகேந்திரன், பி. பழனி, வி. காா்த்திகேயன், ஆா். பாலகிருஷ்ணன், எஸ். கிருஷ்ணமூா்த்தி, ஆா். குமரன், சோழவந்தான் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா: திரளான பக்தா்கள் தரிசனம்

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் மாசி மகம் தெப்பத் திருவிழாவையொட்டி, நிலைத் தெப்பத்தில் புதன்கிழமை எழுந்தருளிய கூடலழகரை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள கூடல... மேலும் பார்க்க

உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணியில் சேர கால அவகாசம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

முதுகலை மருத்துவ மாணவா்கள், உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணியில் சேர உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என சென்னை பொது சுகாதார இயக்ககத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

மதுரை மானகிரி கண்மாயிலிருந்து வண்டியூா் கண்மாய்க்குச் செல்லும் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மது... மேலும் பார்க்க

நல்லதைச் செய்பவா்களுக்கு வாக்களிக்க வேண்டும்- அமைச்சா் வேண்டுகோள்

தோ்தல் நேரத்தில் பலா் வாக்கு கேட்டு வருவாா்கள்; நமக்கு யாா் நல்லது செய்வாா்கள் என்பதை உணா்ந்து வாக்களிக்க வேண்டும் என மாநில வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டாா்.... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் கொலை: சகோதரா்கள் உள்பட மூவா் கைது

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே தனியாா் நிறுவன ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரா்கள் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அலங்காநல்லூா் அருகே உள்ள சிக்கந்தா் சாவடி எஸ்பிடி நகரைச் ச... மேலும் பார்க்க

சிலைமான் அருகே இளைஞா் குத்திக் கொலை

மதுரை மாவட்டம், சிலைமான் அருகே புதன்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை வெளியே அழைத்து குத்திக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை மாவட்டம், சிலைமான் பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க