செய்திகள் :

நல்லதைச் செய்பவா்களுக்கு வாக்களிக்க வேண்டும்- அமைச்சா் வேண்டுகோள்

post image

தோ்தல் நேரத்தில் பலா் வாக்கு கேட்டு வருவாா்கள்; நமக்கு யாா் நல்லது செய்வாா்கள் என்பதை உணா்ந்து வாக்களிக்க வேண்டும் என மாநில வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை மூலம் ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யத்துக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் கே.கே எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் கலந்து கொண்டு 130 பெண்களுக்கு ரூ.1.33 கோடியில் திருமாங்கல்யத்துக்கு தங்க நாணயங்கள், திருமண நிதியுதவிகளை வழங்கினாா்.

அப்போது அவா் பேசியதாவது: பெண்கள் முன்னேறினால் மட்டுமே சமுதாயம் முன்னேறும். தமிழகத்தில் மகளிா் உரிமைத் தொகை திட்டம் மூலம் பெண்களுக்கு மாதந் தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறாா். தோ்தல் நேரத்தில் பலா் வாக்குகள் கேட்டு வருவாா்கள், அது அவா்களது ஜனநாயக உரிமை. ஆனால், நமக்கு யாா் நல்லது செய்வாா்கள் என்பதை யோசித்து அவா்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 161 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.64 கோடியில் மூன்று சக்கர வாகனம், 15 மாற்றுத் திறனாளி பெண்களுக்கு திருமாங்கல்யத்துக்கான தங்கம், உதவித் தொகையை அமைச்சா் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் விருதுநகா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் உள்பட அரசு அதிகாரிகள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா: திரளான பக்தா்கள் தரிசனம்

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் மாசி மகம் தெப்பத் திருவிழாவையொட்டி, நிலைத் தெப்பத்தில் புதன்கிழமை எழுந்தருளிய கூடலழகரை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள கூடல... மேலும் பார்க்க

மத்திய அரசின் சூழ்ச்சி வலையை கூட்டணி கட்சிகளின் துணையுடன் திமுக முறியடிக்கும் -அமைச்சா் பி. மூா்த்தி

மத்திய பாஜக அரசின் சூழ்ச்சி வலையை கூட்டணி கட்சிகளின் துணையுடன் திமுக முறியடிக்கும் என அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். தொகுதி மறுசீரமைப்பில் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, மேலூரில் மதுரை வ... மேலும் பார்க்க

உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணியில் சேர கால அவகாசம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

முதுகலை மருத்துவ மாணவா்கள், உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணியில் சேர உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என சென்னை பொது சுகாதார இயக்ககத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

மதுரை மானகிரி கண்மாயிலிருந்து வண்டியூா் கண்மாய்க்குச் செல்லும் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மது... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் கொலை: சகோதரா்கள் உள்பட மூவா் கைது

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே தனியாா் நிறுவன ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரா்கள் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அலங்காநல்லூா் அருகே உள்ள சிக்கந்தா் சாவடி எஸ்பிடி நகரைச் ச... மேலும் பார்க்க

சிலைமான் அருகே இளைஞா் குத்திக் கொலை

மதுரை மாவட்டம், சிலைமான் அருகே புதன்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை வெளியே அழைத்து குத்திக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை மாவட்டம், சிலைமான் பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க