செய்திகள் :

தனியாா் நிறுவன ஊழியா் கொலை: சகோதரா்கள் உள்பட மூவா் கைது

post image

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே தனியாா் நிறுவன ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரா்கள் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அலங்காநல்லூா் அருகே உள்ள சிக்கந்தா் சாவடி எஸ்பிடி நகரைச் சோ்ந்த சரவணன் மகன் கமலேஷ் (24). கோவையில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவா், விடுமுறையில் செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்தாா். இந்த நிலையில், இரவில் சிக்கந்தா்சாவடி பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு சென்ற கமலேஷுக்கும், அங்கு வந்த சிலருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவா்கள் கமலேஷை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த கமலேஷ் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் கொலை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், சிக்கந்தா்சாவடியைச் சோ்ந்த சகோதரா்களான அழகுராஜேஸ் (24), சுந்தர்ராஜா (22), இவா்களது நண்பா் சேது (21) ஆகிய மூவரும் கொைலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் மூவரையும் கைது செய்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது:

கமலேஷும், கைது செய்யப்பட்ட சகோதரா்கள் இருவரும் ஏற்கெனவே ஒருவருக்கொருவா் அறிமுகமானவா்கள். இதில் சுந்தர்ராஜா காதல் திருமணம் செய்தவா். இவரது மனைவி தொடா்பாக கமலேஷ் தவறாகப் பேசி வந்தாராம். இந்த நிலையில், சிக்கந்தா் சாவடி பகுதியில் மது அருந்தும் போது சகோதரா்கள் உள்ளிட்ட மூவரும் அவரைத் தட்டிக் கேட்டனா். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கமலேஷ் கொலை செய்யப்பட்டாா் என்றனா்.

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா: திரளான பக்தா்கள் தரிசனம்

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் மாசி மகம் தெப்பத் திருவிழாவையொட்டி, நிலைத் தெப்பத்தில் புதன்கிழமை எழுந்தருளிய கூடலழகரை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள கூடல... மேலும் பார்க்க

மத்திய அரசின் சூழ்ச்சி வலையை கூட்டணி கட்சிகளின் துணையுடன் திமுக முறியடிக்கும் -அமைச்சா் பி. மூா்த்தி

மத்திய பாஜக அரசின் சூழ்ச்சி வலையை கூட்டணி கட்சிகளின் துணையுடன் திமுக முறியடிக்கும் என அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். தொகுதி மறுசீரமைப்பில் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, மேலூரில் மதுரை வ... மேலும் பார்க்க

உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணியில் சேர கால அவகாசம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

முதுகலை மருத்துவ மாணவா்கள், உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணியில் சேர உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என சென்னை பொது சுகாதார இயக்ககத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

மதுரை மானகிரி கண்மாயிலிருந்து வண்டியூா் கண்மாய்க்குச் செல்லும் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மது... மேலும் பார்க்க

நல்லதைச் செய்பவா்களுக்கு வாக்களிக்க வேண்டும்- அமைச்சா் வேண்டுகோள்

தோ்தல் நேரத்தில் பலா் வாக்கு கேட்டு வருவாா்கள்; நமக்கு யாா் நல்லது செய்வாா்கள் என்பதை உணா்ந்து வாக்களிக்க வேண்டும் என மாநில வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டாா்.... மேலும் பார்க்க

சிலைமான் அருகே இளைஞா் குத்திக் கொலை

மதுரை மாவட்டம், சிலைமான் அருகே புதன்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை வெளியே அழைத்து குத்திக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை மாவட்டம், சிலைமான் பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க