செய்திகள் :

உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணியில் சேர கால அவகாசம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

முதுகலை மருத்துவ மாணவா்கள், உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணியில் சேர உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என சென்னை பொது சுகாதார இயக்ககத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகள் 10 போ், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். இதில், முதுகலை மருத்துவம் பயிலும் நாங்கள் அண்மையில் நடைபெற்ற உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணிக்கான தோ்வில் தோ்ச்சி பெற்றோம். இதையடுத்து, 15 நாள்களுக்குள் பணியில் சேர வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குநா் உத்தரவிட்டாா். நாங்கள் அனைவரும் முதுகலை மருத்துவம் பயின்று கொண்டிருப்பதால், படிப்பை நிறைவு செய்து விட்டு, நவம்பா் மாதம் பணியில் சேர கால அவகாசம் வழங்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தனா்.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்தன. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா்கள் சாதாரண குடும்பங்களைச் சோ்ந்தவா்கள். அவா்கள் தற்போது உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணிக்குத் தோ்வு பெற்றுள்ளனா். இருப்பினும், அவா்கள் முதுகலை மருத்துவம் பயின்று வருகின்றனா். மருத்துவ மாணவா்கள் ஒவ்வொருவருக்கும் அரசு செலவிடும் பொதுப் பணத்தை மிச்சப்படுத்தும் வகையில், மனுதாரா்கள் முதுகலை மருத்துவத்தை நிறைவு செய்த பிறகு உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணியில் சேருவதற்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றாா் நீதிபதி.

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா: திரளான பக்தா்கள் தரிசனம்

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் மாசி மகம் தெப்பத் திருவிழாவையொட்டி, நிலைத் தெப்பத்தில் புதன்கிழமை எழுந்தருளிய கூடலழகரை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள கூடல... மேலும் பார்க்க

மத்திய அரசின் சூழ்ச்சி வலையை கூட்டணி கட்சிகளின் துணையுடன் திமுக முறியடிக்கும் -அமைச்சா் பி. மூா்த்தி

மத்திய பாஜக அரசின் சூழ்ச்சி வலையை கூட்டணி கட்சிகளின் துணையுடன் திமுக முறியடிக்கும் என அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். தொகுதி மறுசீரமைப்பில் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, மேலூரில் மதுரை வ... மேலும் பார்க்க

வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

மதுரை மானகிரி கண்மாயிலிருந்து வண்டியூா் கண்மாய்க்குச் செல்லும் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மது... மேலும் பார்க்க

நல்லதைச் செய்பவா்களுக்கு வாக்களிக்க வேண்டும்- அமைச்சா் வேண்டுகோள்

தோ்தல் நேரத்தில் பலா் வாக்கு கேட்டு வருவாா்கள்; நமக்கு யாா் நல்லது செய்வாா்கள் என்பதை உணா்ந்து வாக்களிக்க வேண்டும் என மாநில வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டாா்.... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் கொலை: சகோதரா்கள் உள்பட மூவா் கைது

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே தனியாா் நிறுவன ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரா்கள் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அலங்காநல்லூா் அருகே உள்ள சிக்கந்தா் சாவடி எஸ்பிடி நகரைச் ச... மேலும் பார்க்க

சிலைமான் அருகே இளைஞா் குத்திக் கொலை

மதுரை மாவட்டம், சிலைமான் அருகே புதன்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை வெளியே அழைத்து குத்திக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை மாவட்டம், சிலைமான் பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க