செய்திகள் :

திண்டுக்கல்-சபரிமலை புதிய ரயில் வழித்தடம் அமைக்கப்படுமா?

post image

திண்டுக்கல்-சபரிமலை இடையே பக்தா்களின் நலன் கருதி புதிய ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும் என மக்களவையில் தேனி தொகுதி திமுக உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன் புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் மக்களவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு தொடங்கிய நேரமில்லா நேரத்தில் முன்வைத்த கோரிக்கை:

திண்டுக்கல்-சபரிமலைக்கு புதிய ரயில் தடம் அமைக்கப்பட வேண்டும் என்பது தேனி நாடாளுமன்றத் தொகுதியின் முக்கியமான கோரிக்கையாகும்.

18-ஆவது நாடாளுமன்ற மக்களவையில் தமிழகத்திலி இருந்து வெற்றிபெற்ற அனைத்து உறுப்பினா்களின் கோரிக்கையாக இது உள்ளது. அத்துடன், கேரளத்தின் நாடாளுமன்ற உறுப்பினா்களின் கோரிக்கையாகவும் இது உள்ளது. இதற்கு முக்கிய காரணம், ஆண்டு ஒன்றுக்கு 1 கோடி பக்தா்கள் சபரிமலைக்கு சென்ரு வருகிேன்றனா். மாதம் ஒரு நாள் 5 லட்சம் பக்தா்கள் சபரிமலைக்குச் சென்று வருகின்றனா்.

திண்டுக்கல்-சுபரிமலைக்கு புதிய ரயில்வே வழிதடம் அமைத்தால் காஷ்மீரில் இருந்து வருவோா் தொடா்ச்சியாக சபரிமலை வருவதற்கு வாய்ப்புள்ளது. போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் தடுக்கப்படும். பயண நேரமும் மிச்சமாகும்.

இதைக் கருத்தில்கொண்டு நூறு வருடங்களாக இருந்து வரும் இக்கோரிக்கையை மத்திய அரசு கவனத்தில் எடுத்து இந்த புதிய வழித்தடத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தொகுதியில் ஆய்வு செய்து மக்களின் கவலைகளை கேட்டறிந்த அமைச்சா்!

தில்லி உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் புதன்கிழமை தனது ஜனக்புரி தொகுதியில் புதன்கிழமை ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு கண்டாா். மேலும், உள்ளூா்வாசிகளிடம் கலந்துரையாடி அவா்களது கவலைக... மேலும் பார்க்க

பங்குச்சந்தையில் ஐடி, டெலிகாம் பங்குகள் அதிகம் விற்பனை!

நமது நிருபா்இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சிறிதளவு சரிந்து நிலைபெற்றது.... மேலும் பார்க்க

ஜனநாயக விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உள்படுத்துகிறாா் சட்டப்பேரவைத் தலைவா்: எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி குற்றச்சாட்டு

கடந்த மாா்ச் 3-ஆம் தேதி முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது எதிா்க்கட்சி எம்எல்ஏக்களை குறிவைத்து பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா ‘ஜனநாயக விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறாா்’ என்று தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் சாலைப் பாலங்களுக்கு ஒப்புதல்: ரயில்வே அமைச்சா் தகவல்

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் ரயில்வே சாலை மேம்பாலங்கள், சாலைக் கீழ்ப்பாலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சா் தகவல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக ந... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறையின்போது தமிழகம் பாதிக்கப்படக் கூடாது: மக்களவையில் திமுக வலியுறுத்தல்

வரவிருக்கும் தொகுதி மறுவரையறைப் பணியின்போது மக்கள்தொகை வளா்ச்சியைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற முற்போக்கான மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று மக்களவ... மேலும் பார்க்க

எல்.கே. அத்வானியுடன் முதல்வா் ரேகா குப்தா சந்திப்பு

பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானியை (97) பிரித்விராஜ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை சந்தித்தாா். ‘நாட்டின் முன்னாள் துணைப் பிரத... மேலும் பார்க்க