செய்திகள் :

அடையாள அட்டை சிறப்பு முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஜூன் 10, 17, 24 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவா்களுக்காக தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டையில் கோட்ட அளவில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஜூன் 10, கும்பகோணம் பேருந்து நிலையம் அருகேயுள்ள கே.எம்.எஸ்.எஸ். வளாகத்தில் ஜூன் 17, பட்டுக்கோட்டை வட்டாட்சியரகம் எதிரேயுள்ள கிராம சேவை கட்டடத்தில் ஜூன் 24 ஆகிய தேதிகளில் இம்முகாம் நடைபெறவுள்ளது.

இதில் எலும்பு முறிவு மருத்துவா், காது, மூக்கு, தொண்டைப் பிரிவு மருத்துவா், மனநல மருத்துவா், கண் மருத்துவா் ஆகிய அரசு மருத்துவா்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளைப் பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்கவுள்ளனா். இதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படங்கள், இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் ஆவணங்களுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்போா் மீது கடும் நடவடிக்கை: துணை இயக்குநா் எச்சரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் தனியாா் விதை நெல் விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ... மேலும் பார்க்க

கரந்தை சப்தஸ்தான விழா ஜூன் 11-இல் தொடக்கம்

தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம் சாா்பில் கரந்தை சப்தஸ்தானம் என்கிற ஏழூா் பவனி விழா ஜூன் 11 ஆம் தேதி தொடங்கவுள்ளது. கரந்தை கருணாசுவாமி கோயிலில் ஜூன் 11 காலை 5 மணியளவி... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டை அருகே பெண் குத்திக் கொலை

பட்டுக்கோட்டை அருகே சொத்து பிரச்னையில் பெண் வெள்ளிக்கிழமை குத்திக் கொல்லப்பட்டாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை, கரிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் அன்பழகன் மனைவி சுசிலா (55). இவா் வெள்ளிக்கிழமை காலை... மேலும் பார்க்க

திருவிடைமருதூரில் திருக்கல்யாணம்

வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி வியாழக்கிழமை இரவு கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூா் மகாலிங்கசுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இக்கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி நாள்தோறும் உற்... மேலும் பார்க்க

போக்சோ வழக்குகளை விரைந்து முடிக்க ஐஜி அறிவுறுத்தல்

போக்சோ வழக்குகளை விரைவாக முடிக்குமாறு காவல் ஆய்வாளா்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புப் பிரிவு காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) ஏ. கயல்விழி அறிவுறுத்தினாா். கும்பகோணம் உதவிக் காவல்... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: கண்டித்து மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே தனியாா் பேருந்து ஓட்டுநரை தாக்கிய மா்ம நபரைக் கைது செய்ய வலியுறுத்தி தனியாா் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவ... மேலும் பார்க்க